வடசென்னை மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 16, 2022

வடசென்னை மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம்

வடசென்னை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் எண்ணூர் சிவகாமி நகரில் மாவட்டத் தலைவர் வெ.மு.மோகன் இல்லத்தில் உற்சாகமாக நடைபெற்றது.  மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், அமைப்புச் செயலாளர்கள் ஊமை.செயராமன், பொன்னேரி வி.பன்னீர்செல்வம், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் சோ.சுரேசு, மண்டல செயலாளர்  தே.செ.கோபால்,  மத்தூர் நிலவன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். அறிவாசான் தந்தைபெரியார் பிறந்தநாள் விழா, "ஆர்.எஸ்.எஸ்.எனும் டிரோஜன் குதிரை" நூல் அறிமுக விழா நடத்துவது என்றும், திருவொற்றியூர், ஆர்.கே.நகர், திருவிகநகர், பெரம்பூர், எழும்பூர், அண்ணாநகர், துறைமுகம் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளில் விடுதலை சந்தாக்களைத் திரட்டி தமிழர் தலைவர் அவர்களுக்குப் பிறந்தநாள் பரிசாக வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.(15.10.2022)


No comments:

Post a Comment