தமிழ்நாட்டில் இந்தியை அனுமதியோம்! மதிமுக ஆர்ப்பாட்டத்தில் வைகோ முழக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 7, 2022

தமிழ்நாட்டில் இந்தியை அனுமதியோம்! மதிமுக ஆர்ப்பாட்டத்தில் வைகோ முழக்கம்

சென்னை,அக்.7-தமிழ்நாட்டில் இந்தியை ஒருபோதும் திணிக்க முடியாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உறுதியாக தெரிவித்துள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் மதிமுக சார்பில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (6.10.2022)ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மதிமுகபொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத் தில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், வைகோ கண்டன உரையாற்றினார். அவர் உரையில் குறிப்பிட்டதாவது: இந்தி, சமஸ்கருதத்தை திணிக்க முயற்சிக்கிறார்கள். அது ஒரு போதும் நடக்காது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறக் கூடிய திராவிட மாடல் ஆட்சி இடம் கொடுக்காது. நாங்கள் பக்க பலமாக இருப்போம். இந்தி, சமஸ்கிருத கனவை மறந்து விடுங்கள். துப்பாக்கி குண்டு களுக்கே அஞ்சாமல் போராடி இந்தியை எதிர்த்து வந்து இருக்கிறோம்.

தமிழும், ஆங்கிலமும்தான்: குண்டுகள் வந்து பாய்ந்தபோதே அஞ்சாத கூட்டம், கோடிகளுக்கா பயப்பட போகிறது.தமிழ்நாட்டில் தமிழும், ஆங்கிலமும் தான் என்ற நிலையை ஒருபோதும் மாற்ற முடியாது என்றார்.


No comments:

Post a Comment