தொழில்நுட்பத் துறைக்கு காத்திருக்கும் பேராபத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 6, 2022

தொழில்நுட்பத் துறைக்கு காத்திருக்கும் பேராபத்து

  


அய்தராபாத். அக்.6 தொழில் நுட்ப வல்லுநர்கள் வருங் காலத்தில் தொழில்நுட்ப துறைக்குத் திரும்புவதில் ஆர்வம்  கொள்ள மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் 2025-ஆம் ஆண் டுக்குள் 22 லட்சம் தொழில்நுட்ப ஊழியர்கள் தங்கள் வேலையை விட்டு வெளியேற வாய்ப்புள்ள தாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது குறித்து டீம்லீஸ் டிஜிட்டல் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள 'டேலண்ட் எக்ஸோடஸ்' என்ற ஆய்வு அறிக்கையில், 57 சதவீத தொழில்நுட்ப வல்லுநர்கள் வருங்காலத்தில் தொழில் நுட்பத் துறைக்குத் திரும்புவதில் ஆர்வம் கொள்ள மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-ஆம் நிதியாண்டில் 49 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, ​​2023 நிதியாண்டிற்கான ஒப் பந்தப் பணியாளர்களின் எண் ணிக்கை 55 சதவீதம் வரை வளர்ச்சியடையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஊழியர் களின் ஊதிய உயர்வு செயல் திறனை மேம்படுத்தி, வேலை திருப்தியை அதிகரித்தாலும் 2025-க்குள் 20 லட்சம் முதல் 22 லட்சம் தொழில்நுட்ப ஊழி யர்கள் வேலையை விட்டு வெளி யேறுவார்கள் என்று எதிர் பார்க்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், 2021-ஆம் ஆண்டில் தொழில் நுட்ப சேவைகள் துறையின் வீழ்ச்சிக்கு புதிய நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை அதி கரிப்பதே முக்கியக் காரண மாகும் என ஆய்வு கூறுகிறது. தொழில்நுட்ப நிறுவனங்கள் வருவாய் இழப்பை எதிர் கொண்டு வருவதால், அங்கு நிறுவனங்களின் சிறந்த ஊழி யர்கள் தானாக முன்வந்து அதிக அளவில் வெளியேறுவ தாக அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.


No comments:

Post a Comment