சென்னை,அக்.21- சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒன்றிய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு ஒன்றிய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிலையங்களில் 10ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு ஒன்றிய அரசின் www.scholorship.gov.in என்ற இணையதளத்தில் அக்.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இணையதளம் மூலம்... தகுதியான மாணவ, மாணவிகள் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்திட்டத்துக்கு அக்.31ஆம் தேதி வரை மேற்கண்ட இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment