கோவில் பெயரில் மோசடி! கோவில் பெயரில் தனி நபர்கள் நடத்தும் இணையதளங்களை முடக்க வேண்டும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 12, 2022

கோவில் பெயரில் மோசடி! கோவில் பெயரில் தனி நபர்கள் நடத்தும் இணையதளங்களை முடக்க வேண்டும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

மதுரை, அக். 12- இராமநாதபுரம் மாவட்டத் தைச் சேர்ந்த மார்க்கண்டன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவி லில் 60ஆம் ஆண்டு திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறுகின்றன. 

இந்த கோவிலை அணுகும் பலர் தவறுத லாக தனியார் இணையதளங்களை தொடர்பு கொள்கின்றனர். கோவில் நிர்வாகம் தர்ப்பில் திருமணம் நடத்துவதற்கு 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும். ஆனால் தனியார் இணையதளங்களில் 4 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், இது போன்ற தனியார் இணையதளங்களை முடக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளை நிர்வாக நீதிபதி மகாதேவன், நீதிபதி சத்யநாரா யண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கோவி லின் பெயரில் தனி நபர்கள் இணையதளம் நடத்தக் கூடாது என்று தெரிவித்த நீதிபதிகள், தனியார் நடத்தும் இணையதளங்களை முடக்க வேண்டும் எனவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். 

மேலும் அவர்கள் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கை வரும் அக்டோபர் 13ஆம்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment