கிண்டியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 27, 2022

கிண்டியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

சென்னை,அக்.27- வேலைவாய்ப்புத் துறை இயக் குநர் கொ.வீரராகவராவ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மய்யங்களில் 2ஆவது மற்றும் 4ஆவது வெள்ளிக்கிழமைகளில் வேலைதேடுவோர், வேலை அளிக்கும் நிறுவனங்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதன்மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து நாளை அக்.28ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன.  சென்னை, கிண்டி - ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மய்யத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. 

இம்முகாமில் 8, 10, 12-ஆம் வகுப்பு, அய்டிஅய், டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் ஆகிய கல்வித் தகுதியை உடைய அனைவரும் பங்கேற்கலாம். இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற் கின்றன. இம்முகாம் வாயிலாகப் பணி நியமனம் பெறும் இளைஞர்களின் பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. இதில் கலந்துகொள்ள எந்தவித கட்டணமும் செலுத்தத் தேவை இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment