கான்சிராம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 8, 2022

கான்சிராம்

பகுஜன் சமாஜ் கட்சியைத் தோற்று வித்த கான்சிராம் அவர்களின் நினைவு நாள் அக்டோபர் - 9.

மத்திய அரசில் பணி புரிந்த இவர் அரசுப் பதவியை உதறித் தள்ளிவிட்டு, 1981ஆம் ஆண்டில் `சோஷித் சமாஜ் சங்கர்ஸ் ஸமிதி' என்று இவர் தொடங்கிய அமைப்புதான் `பகுஜன் சமாஜ்' கட்சியாகப் பரிணாமம் பெற்றது.  தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்கள்தான் இந்நாட்டின் பெரும்பான்மையான வெகு மக்கள்! அவர்களின் கைகளில்தான் நாட்டின் ஆட்சி அதிகாரம் இருக்க வேண்டும் என்பதுதான் அதன் அடிநாதம்!

1995 செப்டம்பரில் தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி உத்தரப் பிரதேசத் தின் தலைநகரமான லக்னோவில் மூன்று நாட்கள் பெரியார் மேளாவை மண்ணும், விண்ணும் துகள்கிளப்ப நடத்திக் காட்டி - இந்தியாவையே தன்பக்கம் திரும்பிப் பார்க்க செய்தார். தமிழ்நாட்டிலிருந்து தனி ரயில் மூலம் சென்று திராவிடர் கழகக் குடும்பத்தினர் கலந்து கொண் டனர். இந்த அதிர்விலிருந்து மக்களைத் திசை திருப்பிட ஆர்.எஸ்.எஸின் பின்னணியில் ஆயுத வியாபாரி சந்திரி சாமியின் ஏற்பாட்டில் பிள்ளை யார் பால் குடித்தார் என்ற ஒரு கட்டுக் கதையை நாடெங்கும் பரப்பினார்கள்.

பெரியாருக்கு ஏன் விழா என்று செய்தியாளர்கள் கான்ஷிராம் அவர் களிடம் கேட்டனர் (லக்னோ 17.9.1995).

மகாத்மா பாபூலே, சாகு மகராஜ், நாராயணகுரு, டாக்டர் அம்பேத்கர் போன்றவர்கள் பார்ப்பனர் ஆதிக் கத்தை எதிர்த்துப் பாடுபட்டார்கள். ஆனால் பெரியார் ராமசாமி அவர்களால் தான் பார்ப்பன ஆதிக்கம் மிகப் பெரிய அளவில் வீழ்ச்சியைச் சந்தித்தது என்று கூறினாரே!

“மனுவாதிகளை செருப்பாலடியுங் கள்” என்பதுதான் பி.எஸ்.பி.யின் முழக்கமாக இருந்தது. ஜாதிய அமைப்பு முறையை ஒழித்துக் கட்டுவேன் என்று கான்ஷிராம் சபதம் செய்தார்” என்று ஆர்.எஸ்.எஸின் ஆலோசகரான திருவாளர் எஸ். குருமூர்த்தி `தினமணி' யில் (17.5.2007) எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தார். கெட்டவாய்ப்பு கான்ஷிராம் மரணம் அடைந்தார். ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற ஒரே பதவி ஆசையால் கான்ஷிராம் அவர்களின் பாதையை விட்டு விலகி பார்ப்பனர்களையும் இணைத்துக் கொண்டு, கட்சியின் பொதுச் செயலாள ராகவே ஒரு பார்ப்பனரை (சதீஷ் சந்திர மிஸ்ரா) நியமித்துக் கொண்டார் மாயாவதி. பதவி என்று வந்துவிட்டால் கொள்கையில் சமரசம்தானோ!

No comments:

Post a Comment