புதுடில்லி, அக்.21 டில்லியை சேர்ந்த 40 வயது பெண் உத்தரபிரதேசம் காசியாபாத்தில் கடத்தப்பட்டு 2 நாட்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப் பட்ட கொடூர சம்பவம் அரங் கேறியுள்ளது. டில்லியை சேர்ந்த 40 வயது பெண் கடந்த 15.10.2022 அன்று பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் சென்றுள் ளார். பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு டில்லி திரும் புவதற்காக இரவு காசியாபாத் பேருந்து நிலையத்தில் நின்றுள் ளார். அப்போது, காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை கடத்தி சென்றுள் ளனர். பின்னர் அந்த பெண்ணை அந்த கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. 2 நாட்களாக அந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய் யப்பட்டுள்ளார். பாலியல் ரீதியில் அந்த பெண் கொடூரமாக துன்புறுத்தப்பட்டுள்ளார். 2 நாட்களாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அந்த பெண் காசியாபாத்தின் ஆஷ்ரம் சாலை பகுதியில் பிறப்புறுப்பில் இரும்பு கம்பி சொருகப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டுள்ளார். இந்த கொடூர செயலுக்கு உள் ளான அந்த பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று டில்லி மகளிர் ஆணைய தலைவி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறை பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளில் 4 பேரை கைது செய்துள்ளனர்.
எஞ்சிய ஒரு குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கொடூர குற்றச்செயலில் ஈடுபட்ட 5 பேரும் அந்த பெண் ணுக்கு பழக்கம் உடையவர்கள் என காவல் துறையினர் தெரிவித்துள் ளனர்.. பெண்ணை கடத்தி 2 நாட்கள் கூட்டு பாலியல் வன் கொடுமை செய்து அவரின் பிறப்புறுப்பில் இரும்பு கம்பியை சொருகி விவரிக்க முடியாத கொடூர செயலில் ஈடுபட்ட கொடூரர்கள் 5 பேருக்கும் கடுமை யான தண்டனை வழங்க வேண் டும் என கண்டன குரல் எழுந் துள்ளது
No comments:
Post a Comment