பாஜக ஆளும் மத்தியப்பிரதேச மாநிலத்தில் குடிநீர் குழாய் மூலம் கள்ளச்சாராயம் வழிகிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 13, 2022

பாஜக ஆளும் மத்தியப்பிரதேச மாநிலத்தில் குடிநீர் குழாய் மூலம் கள்ளச்சாராயம் வழிகிறது

போபால்,அக்.13-மத்தியப் பிரதேசம் மாநிலம் ஜன்சோதா கிராமத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் தயாரிக்கப்பட்டு பிளாஸ்டிக்  டேங்கில் நிரப்பப்பட்டு, பூமிக்கடியில் புதைத்துவிட்டு, கைப்பம்பை அந்த இடத்தில் அமைத்து, கள்ளச்சாராயத்தை உறைகளில் நிரப்பி (பாக்கெட்டுகளில்) விற்பனை செய்யப்பட்ட தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அப்பொழுது சம்பந்தமே இல்லாமல் ஒரு இடத்தில் இருந்த அடிப்பம்பை பயன்படுத்தி பார்த்தனர். அதில் நீர் வந்த நிலையில் கலங்கலாக இருந்த அந்த நீரை சாதாரண நீர் என்று காவல்துறையினர் நினைத்தனர். ஆனால் தொடர்ந்து கைப்பம்பை அடித்த பொழுது அதிலிருந்து வருவது கள்ளச்சாராயம் என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அந்த கைப்பம்பிற்கு கீழே தோண்டி பார்த்தபொழுது ஏழடி ஆழத்தில் டேங்கில் கள்ளச்சாராயம் பதுக்கி வைக்கப்பட்டு தேவைப்படும்போது கைப்பம்பில் அடித்து உறைகளில் (பாக்கெட் டில்) அடைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பான காட்சிப்பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

No comments:

Post a Comment