பள்ளிப் பேருந்துகளில் கேமரா கட்டாயம்: தமிழ்நாடு அரசு உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 21, 2022

பள்ளிப் பேருந்துகளில் கேமரா கட்டாயம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை,அக்.21- பள்ளிப் பேருந்துகளில் முன் புறமும், பின்புறமும் கேம ராவும், பின்பகுதியில் சென் சார் கருவியும் கட்டாயம் பொருத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட் டுள்ளது. பள்ளி வாகனங் களில் சிக்கி மாணவர்கள் விபத்துக்குள்ளாவதைத் தடுக்கும் வகையில், அனைத்து பள்ளிப் பேருந் துகளிலும் கேமரா, சென்சார் பொருத்துவதை கட்டாயமாக்க தமிழ்நாடு அரசு முடிவுசெய்தது.

அதன் தொடர்ச்சியாக மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான வரைவு, கடந்த ஜூன் 29ஆம்தேதி உள்துறைச் செயலரால் அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்த வரைவு மீதான கருத்துக்கேட்பு ஜூலை 29ஆம் தேதி முடிவடைந்தது. இது தொடர்பான உத்தரவை வெளியிட அரசின் ஒப்புதலும் பெறப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இந்த உத்தரவு தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment