சென்னை,அக்.28 தமிழ்நாடு அரசு நேற்று (27.10.2022) வெளியிட்ட அறிவிப்பு: 2014 முதல் 2017 வரை பருவ முறையில் பயிற்சி பெற்ற மேனாள் பயிற்சியாளர்களுக்கு துணைத் தேர்வு எழுத (1+4) 5 வாய்ப்புகள் கொடுக் கப்பட்ட நிலையில் தற் போது கூடுதலாக ஒரு அரிய வாய்ப்பும், 2018 முதல் 2021 வரை ஆண்டு முறையில் பயிற்சி பெற்ற மேனாள் பயிற்சியாளர்களுக்கு துணைத் தேர்வு எழுத கூடுதலாக ஒரு வாய்ப்பும் டி.ஜி.டி.யால் வழங்கப் பட்டுள்ளது.
எனவே, கருத்தியல், பணிமனை கணித அறிவியல் மற்றும் வேலைவாய்ப்புத் திறன் ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெறாத மேனாள் பயிற்சியாளர்கள் தாங்கள் பயின்ற தொழிற்பயிற்சி நிலையங்களை வருகிற 10ஆம் தேதிக்குள் தொடர்பு கொண்டு, சம்பந்தப்பட்ட பாடங் களுக்கான தேர்வுக் கட்டணத்தை தொழிற்பயிற்சி நிலைய வழிகாட்டுதலின்படி Portal payment link இல் செலுத்தி, இந்த வாய்ப்பினை பயன்படுத்தி துணைத் தேர்வை சிபிடி முறையில் எழுதி பயன்பெறுமாறு கேட் டுக் கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment