ஹிந்தி திணிப்புக்கு எதிராக அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 27, 2022

ஹிந்தி திணிப்புக்கு எதிராக அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

மதுரை, அக்.27 ஹிந்தி திணிப்புக்கு எதிராக அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது   ஒன்றிய அரசின் அலுவலகங்களில் அலுவல் மொழியாக ஹிந்தியை கொண்டு வருவதற்காக குடியரசுத் தலை வருக்குஅனுப்பப்பட்ட நாடாளுமன்ற குழுவின் முடிவை திரும்ப பெற கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தல்லாகுளம் தலைமை அஞ்சல் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டு  25.10.2022 அன்று  காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் அவர்கள் ஹிந்தி திணிப்புக்கு எதிராக வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி கண்டன முழக்கங்களை எழுப்பினர். அப்போது அங்கு பாதுகாப்பிற்கு இருந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.


No comments:

Post a Comment