செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 12, 2022

செய்தியும், சிந்தனையும்....!

அவாள் தவிர....

* 25 ஆண்டுகளில் இந்தியா வல்லரசாக வேண்டும்.

- ஆளுநர் ஆர்.என்.ரவி

>> ஹிந்துக்களைத் தவிர, அதிலும் அவாளைத் தவிர வேறு யாரும் இந்தியாவில் வாழக்கூடாது - அப்படித்தானே!

அக்கப்போர் பேசுகிறது

* தி.மு.க.மீது அதிருப்தி ஏற்படும் போதெல்லாம் மொழிப் பிரச்சினையைக் கிளப்புகிறார்கள்.

- தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை 

>> மக்களின் பொருளாதாரப் பிரச்சினை வெடித்துக் கிளம் பும் போதெல்லாம் மொழிப் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொள்வது மோடி அரசே!

அப்படி வா வழிக்கு!

* 5 மாநிலங்களை உள்ளடக்கிய திராவிடத்தை தமிழ் என சுருக்கிவிட்டனர்.

- ஆளுநர் ஆர்.என்.ரவி 

>> பரவாயில்லையே, ஆரியர் - திராவிடர்பற்றி ஆர்.எஸ்.எஸ்காரர்கள் ஒப்புக் கொண்டு பேச ஆரம்பித்துவிட்டார்களே!


No comments:

Post a Comment