அண்ணாமலை மீது டி.ஜி.பி. குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 30, 2022

அண்ணாமலை மீது டி.ஜி.பி. குற்றச்சாட்டு

சென்னை, அக். 30- “கோவை சிலிண்டர் வெடிப்பு வழக்கில் அவதூறு பரப்பி வருகிறார் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை; புலன் விசா ரணை நடந்து கொண்டிருக்கும் போதே, பல கருத்துக்களைக் கூறி புலன் விசாரணையை திசை திருப்ப முயற்சிக்கிறார் அண்ணாமலை” என தமிழ் நாடு காவல்துறை செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: “பி.ஜே.பி மாநில தலைவர் அண்ணா மலை காவல்துறை மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார். புலன் விசாரணை நடந்துகொண்டிருக்கும் போதே, அதுவும் வெடித்து சிதறிய சிலிண்டர், மற்றும் காரில் சேகரிக்கப்பட்ட பொருட் கள் என்ன என்பதை ஆய்வு செய்யும் முன்பே அது என்ன என்று பல கருத்துக்களைக் கூறி புலன் விசாரணையை திசை திருப்ப முயற்சிக்கிறார். இந்த வழக்கை தாமதமாக தேசிய புலனாய்விற்கு அனுப் பியதாக கூறுகிறார்.

இது போன்ற நிகழ்வுகள் நடந்த உடன் வழக்கு பதிவு செய்வதும் விசாரணை நடத்து வதும் உள்ளூர் காவல் துறை தான். எல்லா மாநிலத்திலும் இந்த நடைமுறைதான் பின் பற்றப்படுகிறது. இதுதான் சட் டம். விசாரணையில் பயங்கர வாத தடுப்பு சட்டப்பிரிவு ( UAPA) சேர்க்கப்பட்டலோ அல் லது தேசிய புலனாய்வு முகமை சட்டம், 2008இல் குறிப்பிடப் பட்டுள்ள பட்டியலில் உள்ள சட்டப் பிரிவுகளின் கீழ் வழக் குப் பதிவு செய்யப்பட்டாலோ, தேசிய புலனாய்வு முகமை சட்டப் பிரிவு 6இன் படி வழக்கு பதிவு செய்யப் பட்ட காவல் நிலைய அதிகாரி, மாநில அரசாங்கத்திற்கு உடனடியாக ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

வழக்கின் தன்மைக்கு ஏற்ப..

அந்த அறிக்கையைப் பெற் றவுடன், மாநில அரசு, ஒன்றிய அரசிற்கு விரைவில் தெரியப் படுத்த வேண்டும். அந்த அறிக் கையைப் பெற்றவுடன், ஒன்றிய அரசு, 15 தினங்களுக்குள், வழக் கின் தன்மைக்கு ஏற்ப, தேசிய புலனாய்வு முகமை விசார ணைக்கு ஆணை பிறப்பிக்கும். இதுதான் சட்டம். ஆனால், நடைமுறையில் , ஒன்றிய அரசு , தேசிய புலனாய்வு முகமையிடம் கருத்துரு பெற்று, விசார ணைக்கு ஆணை பிறப்பிக்க சில மாதங்கள் கூட ஆவதுண்டு. அதுவரை அந்த வழக்கின் புலன் விசாரணையை, வழக்கு பதிவு செய்த, காவல் நிலைய, புலனாய்வு அதிகாரியே மேற் கொள்வார். 

கோவையில் நடைபெற்ற கார் சிலிண்டர் வெடித்த வழக்கில், இந்த சட்ட நடை முறை, எந்த தாமதமுமின்றி முறையாக பின்பற்றப்பட்டு, மாநில அரசு, ஒன்றிய அரசிற்கு முறையாக அறிக்கையை அனுப்பி, அதன்பிறகு, வழக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றப்பட் டது.

மேலும், சில முக்கியத்துவம் மிக்க வழக்குகளில், ஒன்றிய உள்துறை தாமாகவே முன் வந்து தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கலாம். ஆனால் இந்த வழக்கில், ஒன்றிய அரசு உத் தரவு பிறப்பிக்கும் முன்னரே தமிழ்நாடு முதலமைச்சர் கோவை கார் வெடிப்பு நிகழ்வை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க பரிந்துரை செய்தார்.

இதில் எங்கே தாமதம் வந்தது? இதற்கு முன்னால் நிகழ்ந்த இது போன்ற நிகழ்வு களில் சில மாதங்கள் கழித்துக் கூட வழக்குகள் தேசிய புல னாய்வு முகமையிடம் ஒப்ப டைக்கப்பட்டன, அதுவும் சில வழக்குகளில், சில மாநிலங் களில் ஆவணங்கள் பல மாதங் களுக்குப் பின்னரே  NIA-M -விடம் ஒப்படைக்கப்பட்டன.

தற்போது திடீரென்று வெடிகுண்டு நிகழ்வு கோவை யில் நடக்கப் போவதாக புது டில்லி உள்துறை அமைச்சகம் முன்பாகவே எச்சரித்ததாக புகார் கூறுகிறார். இது அபத் தமானது. 

ஏனென்றால், அவர் குறிப்பி டுவது, புது டில்லி உள்துறை அமைச்சகத்தில் இருந்து அனைத்து மாநில அரசுகளுக் கும், யூனியன் பிரதேசங்களுக்கும அனுப்பப்பட்ட பொதுவான சுற்றறிக்கை ஆகும். இதில் கோவை சம்பவம் பற்றி எந்த இடத்திலும் கூறப்படவில்லை.

அந்த சுற்றறிக்கை மாநில அரசாங்கங்களுக்கு குண்டு வெடிக்கப் போவதாக முன் கூட்டியே எச்சரித்ததாகவும் காவல்துறை அதை அலட்சியப் படுத்தியதாகவும் பொய்யாகப் பழி சுமத்தி ஒரு பொய் பிம் பத்தை எற்படுத்த முயல்கிறார். குறிப்பிட்ட சுற்றறிக்கையில் கோவை மாநகரைப்பற்றி எந்த தகவலும் இல்லை.

18.10.2022 தேதியிட்ட வழக் கமான சுற்றறிக்கை 21ஆம் தேதி பெறப்பட்டு உடனே அனைத்து நகரங்களுக்கும், மாவட்ட காவல்துறை அதி காரிகளுக்கும் தெரிவிக்கப்பட் டது. இவர் சொல்வது போல் கோவையில் இந்த சம்பவம் சில குறிப்பிட்ட நபர்கள் நடத் தப் போகிறார்கள் என்ற தக வல் கிடைத்திருத்தால் தமிழ் நாடு காவல்துறை அந்த நிமி டமே அந்த நபர்களைக் கைது செய்து, வீடுகளை சோதனை யிட்டு, வெடி பொருட்களை கைப்பற்றி இருக்கும்.

எனவே இது போன்ற உண் மையில்லாத மிகைபடுத்தப் பட்ட செய்திகளையும், வதந்தி களையும் மேனாள் கர்நாடக காவல் அதிகாரி பரப்பி தமிழ் நாடு காவல்துறைக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.” எனத் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment