கிருட்டினகிரி தொழில் மய்ய வளாகத்திற்குள் கோவில்- அகற்ற ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா....? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 23, 2022

கிருட்டினகிரி தொழில் மய்ய வளாகத்திற்குள் கோவில்- அகற்ற ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா....?

கிருட்டினகிரி மாவட்ட தொழில் மய்யம் (சிட்கோ) வளாகத்திற்குள், அலுவலக வளாகத்தை ஒட்டிய பகுதியில் பெரிய அளவில் கோவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. ‘‘அரசுக்குச் சொந்தமான இடங்களில் எந்தவித மதச் சின்னங்களோ, கோவில்களோ அமைக்கக் கூடாது'' என்று அரசு ஆணையுள்ளது. மாவட்டத் தொழில் மய்ய மேலாளர் துணையுடன் கோவில் கட்டுமானப் பணி நடைபெறுகிறதா?  அரசு ஆணைகளுக்குப் புறம்பாக அரசு அலுவலக வளாகத்திற்குள் நடைபெறும் கோவில் கட்டுமானப் பணியை அகற்ற கிருட்டினகிரி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா?


No comments:

Post a Comment