மதவெறி என்பது இரண்டு வகையானது என்கிறார் தந்தை பெரியார். அது என்ன மதவெறியில் இரண்டு வகை என்று எண்ணத் தோன்றுகிறது அல்லவா? இதோ விளக்குகிறார் மானுடப் பற்றாளர் தந்தை பெரியார்.
‘எப்படியென்றால் மதக்கொள் கைக்கு, மதப்பெருமைக்கு மாத்திரம் கேடு வந்த காலத்தில் கிளம்பும் வெறி சாதாரண மதவெறியாகும். மதக்கொள் கைக்கு கேடுவருவதுடன் அதனால் சுயநலம், தனது பெருமை, தனது வாழ்க்கை நிலைக்கு கேடு வருகின்றது என்கின்ற நிலையில் ஏற்படுவது மதவெறியும் சுயநல வெறியும் கொண்ட முரட்டு மதவெறியாகும்.’
ஆம் மதவெறி சாதாரண மதவெறி என்றும், முரட்டு மதவெறி என்றும் இருவகை என்பதை வரலாற்று நிகழ்வுகள் தெள்ளத் தெளிவாக நிறுவியிருக்கின்றன.
ஒவ்வொரு நட்சத்திரமும், மிகச் சிறியன போல் நம் கண்களுக்கு காட்சியளித்தாலும், உண்மையில் அவை ஒவ்வொன்றும் சூரியனைவிட பல மடங்குப் பெரியனவாகும் என்று ஆய்வு செய்து கூறிய வானியல் விஞ்ஞானி புரூனோவை தங்களின் மதநூலான விவிலியத்திற்கு மாறான கருத்தைக் கூறினார் என்பதற்காக மதவெறியர்கள் தீயிட்டு கொளுத்தி கொலை செய்தனர். அது சாதாரண மதவெறி.
‘பூமி, தன்னைத் தானே சுற்றிக் கொள்வதோடு, சூரியனையும் சுற்றி சுழன்று வருகின்றது” என்ற உண்மையை உலகிற்கு அறிவித்த போலந்து விஞ்ஞானி கோபர் நிக்கஸ் கருத்தினை வழிமொழிந்து வலியுறுத்தியதற் காக கலிலியோவிற்கு மதவெறியர் கள் கொடுத்தப் பரிசு தனிமை சிறை. இதுவும் சாதாரண மதவெறி இப்படி ஏராளம். இவையெல்லாம் மதப்பெருமைக்கு மாத்திரம் கேடு வருவதால்-வந்ததால் ஏற்பட்ட மதவெறி. ஆனால் நம் நாட்டில் நடைபெற்றுள்ள நிகழ்வுகள் மதப்பெரு மைக்கு கேடு வந்ததால் மட்டும் ஏற்பட்ட தல்ல. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் அதாவது உயர் ஜாதியினராக வாழ்ந்து - வாழும் பார்ப்பனர்களுக்கு ஏற்பட்ட மதவெறி என்பது தங்களின் உயர் வாழ்வுக்கு கேடுவந்துவிடுமே என்கின்ற சுயநலத்தின் மீது ஏற்படும் முரட்டு மதவெறியாகும்.
எனவேதான், இதனையே இந்திய அரசமைப்பும் சட்டத்தின் உறுப்பு 372-இன்படி அங்கீகரிக்கப்படும் இந்துக் சட்டத்தில் மூலங்களில் முதன்மையான தான மனுஸ்மிருதியில் 8ஆவது அத்தியாயத்தில் 348ஆவது சுலோகத்தில்
“உன்செய்கைக்காரரால் தருமமழியும் போதும், அரசனில்லாமையால் வருணா சிரமதருமம் அழியும் போதும், பிரம்ம, ஷத்திரிய, வைசியாணர்ந்தவனை ஆயுத மெடுத்துக்கொண்டு காப்பாற்றலாம்’’ என்று எழுதி வைத்தள்ளனர்.
இதனையே இராஜாஜி, “தர்மம் கெட்டுப்போனால் அதர்மத்தினாலாவது அதை தடுக்க முயலுவது ஒரு தர்மமாகும்” என்று பேசியுள்ளார்.
இதுதான் வரலாறாக பதிவாகியுள்ளது.
தனது நிர்வாக எல்லைக்குள் சனாதன தர்மத்திற்கு எதிராக சமத்துவத்தை நிலைநாட்ட இணைந்த ஆங்கிலேய கலெக்டர் அவர்களை 17.6.1911 அன்று சுட்டுக்கொன்றான் வாஞ்சி அய்யர்.
1948 ஜனவரி 30 அன்று இந்திய துணை கண்டத்தில் விடுதலைக்கு வித்திட்ட மகாத்மா காந்தியை தங்களின் உயர் வாழ்வுக்கு பயன்பட மாட்டார் என்ற உண்மை உறுதியானவுடன் சுட்டுக் கொன்றான் ஆர்.எஸ்.எஸை சேர்ந்த விநாயக நாதுராம் கோட்சே.
இதேபோல தமிழ் நாட்டில் தந்தை பெரியார் வழியில் ஆட்சி கப்பலைச் செலுத்திக்கொண்டிருந்த பச்சை தமிழர் காமராசர் அவர்கள் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகி, காங்கிரசை சமதர்ம பாதைக்கு திருப்பமுயன்ற போது, பசுவதை தடை சட்டத்தைக் காரணம் காட்டி, 7.11.1966 திங்கள் அன்று புதுடில்லி யில் சாதுக்கள் என்ற பெயரில் ஜனசங்கம், ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் காமராசரை பட்டப்பகலில் தீ வைத்து கொளுத்தி கொலை செய்ய முயற்சித்தனர்.
1990ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக இருந்த சமூக நீதிக்காவலர் வி.பி.சிங் அவர்கள் மண்டல பரிந்து ரையை அமல்படுத்தியதை எதிர்த்து வடமாநிலங்களில் மிகப்பெரிய கலவரத் தினை திட்டமிட்டு உருவாக்கியவர்கள் பார்ப்பனர்கள் என்பதும், மறக்க முடியாத ஒன்று அல்லவா?
இன்றைய தினம் இந்தியாவிற்கே முன்மாதிரியான ஆட்சி நடத்தும் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் சமத்துவ மாடல்’ ஆட்சி தங்களின் சுயநல, உயர்வாழ்வின் அஸ்திவாரத்தை ஆட்டங்காணச் செய்யும் வகையில் அனைத்து ஜாதியி னரும் அர்ச்சகர் சட்டம்’’ செயல் வடிவம் பெறுவதை தாங்கிக்கொள்ள முடியாத தர்ப்பைக் கூட்டம் எப்படியேனும் தமிழ் நாட்டைக் கலவர பூமியாக்க துடியாய் துடிக்கிறார்கள். இதற்கு, அவர்கள் மதத்தை பயன்படுத்துகிறார்கள். ஆனால், இங்கு அத்தகைய சதி திட்டத்தை மதத்தின் பெயரால் இந்த மண்-பெரியார் மண் - திராவிட மண்ணில் செயல்படுத்த முடியவில்லை என்ற வெறி உச்சம் பெறுகிறது. அத்தகைய வெறிக்கு இம்மண்ணில் திராவிட மாடல் ஆட்சியில் இடமில்லை என்ற நிலையை உருவாக்குவோம்.
No comments:
Post a Comment