சென்னை, அக்.28 கடலூரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்க முயன்ற போது, 'மரத்தின் மீது குரங்கு தாவுவதைப் போல் ஏன் சுற்றிச் சுற்றி வருகிறீர்கள்' என தரக்குறைவாகப் பேசியிருக்கிறார். அவருடைய இந்தப் பேச்சுக்கு சென்னை பத்திரிகையாளர் யூனியன் (MUJ) கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. அரசியல் கட்சியின் தலைவராக இருப்பவர் பத்திரிகையா ளர்களை அநாகரிக மாகவும், கட்சி, ஆட்சி என அடை யாளப்படுத்தி இழிவுபடுத்தியும் தொடர்ந்து பேசி வருவது மிக மோசமான முன்னுதாரணமாகும்.
எனவே, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் இந்தப் போக்கை நிறுத்திக் கொள்வதுடன், தரக்குறைவான தம்முடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் யூனியன் வலி யுறுத்துகிறது. களப்பணியில் ஈடுபடும் பத்திரிகையாளர் களின் கண்ணியத்தைக் காக்கும் பொறுப்பு இருப்பதை நிறு வனங்களும் உணர்ந்து, இது போன்ற செயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள் கிறோம் என இச்சங்கத்தின் தலைவர் எல்.ஆர்.சங்கர், பொதுச்செயலாளர் வை.மணிமாறன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment