கொச்சி, அக்.12- கடவுள், மதம் பெயரால் பக்தி, மூடத்தனங்கள் பாமர மக்களிடம் பெரு மளவில் வேரூன்றிப்போய் உள்ளன. ஆன் மிகம் என்கிற பெயரால், மக்களின் அறிவை யும், பொருளையும் சுரண்டுகின்ற மூடநம் பிக்கை பரப்பும் கூட்டத்தால் அப்பாவிமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கொச்சியில் லாட்டரி சீட்டு பணத்திற்காக ஆசைப்பட்டு இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கேரளா மாநி லம் கொச்சியில் வசித்து வந்த தருமபுரியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் காணாமல் போன தாக கடந்த செப்டம்பர் மாதம் காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் இது தொடர்பாக லைலா மற்றும் பகவந்த் சிங் என்ற தம்பதியைப் பிடித்து விசா ரித்தனர். அப்போது அவர்கள் பதில் முன் னுக்குப்பின் முரணாக இருந்ததால் அவர் களிடம் அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது தாங்கள் செய்த குற் றத்தை ஒப்புக்கொண்டனர்.
அதாவது கடந்த செப்டம்பர் மாதம் தரும புரியைச் சேர்ந்த பத்மா மற்றும் காலடியைச் சேர்ந்த ரோஸ்லி என்ற இரண்டு பெண்களை ஏமாற்றி இந்த தம்பதியினர் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அவர்களை நரபலி கொடுத்தால் லாட்டரி சீட்டு பணம் விழும் என்ற மூடநம்பிக்கையில் பலி கொடுத்து புதைத்துள்ளனர்.
இதையடுத்து அவர்கள் புதைத்த இடத்தை தம்பதி சொல்லவே, அங்கே சென்ற அதிகாரிகள் இருந்த சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பினர். இதையடுத்து குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த விவகாரத்தில் வேறு குற்றவாளிகளும் உள்ள னரா என்பது குறித்தும் விசாரணை நடை பெற்று வருகிறது. இந்த நிகழ்வு அந்த பகுதி யில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment