சென்னை,அக்.11- மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் கொடையால் 6 பேருக்கு மறு வாழ்வு கிடைத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் சூரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந் தவர் ஜெனிபர் தாஸ் (வயது 45). இவரது மனைவி சுதாராணி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். பக்கவாதத்தால் பாதிக் கப்பட்ட ஜெனிபர் தாஸ், கடந்த 10ஆம் தேதி சென்னை போரூரில் உள்ள சிறீராமச்சந்திரா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி அவர் மூளைச்சாவு அடைந் ததாக மருத்துவர்கள் தெரிவித் தனர். இதையடுத்து கணவருடைய உடல் உறுப்புகளை கொடையாக அளிக்க விரும்புவதாக சுதாராணி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மருத்துவக் குழுவினர் அறுவைச் சிகிச்சை செய்து அவரது உடலில் இருந்து உறுப்புகளை எடுத்தனர்.
மருத்துவர் முகமது ரேலா குழுவினர் கொடையாக கிடைத்த கல்லீரலை அரியானா மாநி லத்தைச் சேர்ந்த 38 வயது பெண் ணுக்கு பொருத் தினர்.
கண்கள் 2 பேருக்கு பொருத்து வதற்காக சிறீராமச்சந்திரா மருத் துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதயம், சிறு நீரகங்கள் சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் 3 பேருக்கு பொருத் தப்பட்டது. மூளைச் சாவு அடைந் தவரின் உடல் உறுப்புகள் கொடை யால் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
No comments:
Post a Comment