சென்னை, அக். 12- தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனை களில் காலியாக உள்ள 1,021 உதவி மருத்துவர் பணியிடங் களுக்கு எம்பிபிஎஸ் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் 1,021 மருத்துவர்கள், செவிலியர்கள், 889 மருந்தாளுநர்கள், டெக்னீஷியன்கள் என 4,308 பணியிடங்கள் காலியாக உள்ளன.இதை மருத்துவப் பணியாளர் தேர்வுவாரியம் (எம்ஆர்பி) மூலம்நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 889 மருந்தாளுநர்களை நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 1,021 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் நேற்று (11.10.2022) வெளியிட்டது. இதன்படி, அரசு மருத்துவமனைகளில் 1,021 உதவி மருத்துவர் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதில்,அனைத்து சமூகப் பிரிவுகளிலும் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு 74 இடங்கள், எஸ்.டி. பிரிவினருக்கு 4 இடங்கள் ஒதுக்கப் படுள்ளன.
உதவி மருத்துவப் பணியிடங்களுக்கு ஷ்ஷ்ஷ்.னீக்ஷீதீ.tஸீ.ரீஷீஸ்.வீஸீ என்ற இணையதளத்தில் வரும் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கணினிவழி எழுத்துத் தேர்வு நவம்பர் மாதம் நடைபெறும். தேர்வு தேதி பின்னர் அறி விக்கப்படும். எஸ்.சி. எஸ்.சி.ஏ. எஸ்.டி. மாற்றுத் திறனாளி களுக்கு ரூ.500, மற்றவர்களுக்கு ரூ.1,000 விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு, ஊதியம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று தேர்வு வாரிய செய்திக் குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment