தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இலக்கியச் செல்வர் குமரி அனந்தனுக்கு வீடு வழங்கி ஆணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 27, 2022

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இலக்கியச் செல்வர் குமரி அனந்தனுக்கு வீடு வழங்கி ஆணை

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  இன்று (27.9.2022) தலைமைச் செயலகத்தில், பெருந்தலைவர் காமராசரின் சீடர், இலக்கியச் செல்வர் முனைவர் குமரி அனந்தனுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் உயர் வருவாய் குடியிருப்பில் வீடு வழங்கி, அதற்கான ஆணையினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில்,   வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்  சு. முத்துசாமி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர்  பூச்சி எஸ். முருகன், தலைமைச் செயலாளர்  வெ.இறையன்பு,  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர்  ஹிதேஷ் குமார் எஸ். மக்வானா,   தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளர்   மகேசன் காசிராஜன்,  தமிழ் வளர்ச்சி இயக்குநர்  ந. அருள், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment