பூணூல் கூட்டத்துக்கு 'வீரமணி' அலர்ஜியா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 14, 2022

பூணூல் கூட்டத்துக்கு 'வீரமணி' அலர்ஜியா?

கேள்வி: கி. வீரமணியின் துலாபாரப் பகுத்தறிவு எதைக் காட்டுகிறது?

பதில்: தங்கள் தொண்டர்கள் கண்ணில் மண்ணைத் தூவி ஏமாற்றுவதும் பகுத்தறிவே என்பதைக் காட்டுகிறது.

('துக்ளக்' 14.9.2022 பக்கம்.9)

இதில் மண்ணைத் தூவுவது என்ற பிரச்சினை எங்கே வந்தது? அந்தத் தொண்டர்கள் தானே அந்தத் துலாபாரத்தை நடத்தியவர்கள்.

ஓகோ! 'விடுதலை' சந்தாவுக்காகக் கொடுக்கப் பட்ட பணமாயிற்றே! 'விடுதலை' என்று வருகிற போது, அவாள் கூட்டத்தின் காஞ்சி 'மகான்கள்' முதற்கொண்டு  வயது ஃப்ராடு தலைமை நீதிபதி ராமச்சந்திரன் அய்யர் வரை தோலுரித்துத் தொங்கப் போடும் திராவிடர் தம் போராயுதமாயிற்றே!

குருமூர்த்திகளின் பூணூல் துடிக்காதா, குருதி கொதிக்காதா?

சிலைகளுக்கு ஆறு கால் பூஜை படையல் போட்டு, (எந்தக் கடவுள் தின்றது?) ஊரார் உழைப்பைச் சுரண்டித் தின்னும் உஞ்சி விருத்திக் கூட்டத்திற்கு வீரமணிபற்றிப் பேச யோக்கியதை கிடையாது. 

கேள்வி: தங்கக் கடத்தல் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறதே?

பதில்: செல்வம் கொழிக்கும் திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் ஏராளமாக தங்கம் வாங்கு கிறார்கள். எனவே தங்கக் கடத்தல் அதிகமாகிறது. ஆகவே தங்கக் கடத்தலும் திராவிட மாடல்தான் என்று ஸ்டாலின் கூறினாலும் கூறலாம்.

('துக்ளக்' 14.9.2022 பக்.8,9)

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிப் போடும் மொள்ளை மாறித்தனம் என்பது இதுதான்.

கோயில் சிலையாகிய சாமிகளின் நகைகளைத் திருடுவதும், ஏன், ஒரிஜினல் சிலையைத் திருடி விற்று விட்டு, டூப்ளிகேட் சாமி சிலைகளை வைக் கும் சவுண்டிக் கூட்டத்துக்கு எதற்கெடுத்தாலும் 'திராவிட மாடல், திராவிட மாடல்'  என்ற பினாத்தல் தானா?

திருப்பதி ஏழுமலையான் தங்க டாலர் ஊழல் பேர்வழிக்கு அவாள் அழைக்கும் செல்லப் பெயர் டாலர் சேஷாத்திரி என்பது! இந்தக் கூட்டம் தங்கம் கடத்தல் பற்றி எல்லாம் பேசலாமா?

கேள்வி: பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் முஸ்லிம் பெண் திருமணம் செய்து கொள்ளலாம் என்று டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது பற்றி?

பதில்: அந்தப் பெண்ணுக்கு உயர்நீதிமன்றம் திருமணத்துக்கு அனுமதி கொடுக்க முடியுமே தவிர, திருமணத்துக்குப் பிறகு பாதுகாப்பு கொடுக்க முடியாது. அய்தராபாத்தில் என்ன நடந்தது என்பது நினைவிருக்கிறதல்லவா!

- ('துக்ளக்' (14.9.2022 பக்.9)

ஓ,ஜெயேந்திர சரஸ்வதிகள் நாட்டில் அதிகம் இருக்கிறார்கள் என்பது அவாளுக்குத் தெரியும் அல்லவா!

ஆமாம், நாட்டில் 30 சதவீத பெண்கள்தான் பெண்மை உள்ளவர்கள் என்று ஊத்தை வாயைத் திறந்து, உளறிக் கொட்டி வாங்கிக் கட்டிக் கொண்ட பேர் வழியல்லவா - எதையாவது பிதற்றிக் கொண்டு தானிருக்கும்.

கேள்வி: மதம், மனிதநேயம் இதில் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?

பதில்: இரண்டுக்கும், ஆனால் மனிதநேயம் இல்லாத மதத்துக்கு அதாவது மற்ற மதங்களை ஏற்காத மதங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன்.

 ('துக்ளக்' 14.9.2022 பக்கம் 9) 

கிறிஸ்தவர்கள் கிருஷ்ணனை வணங்க வேண் டும், முஸ்லிம்கள் ராமனை வணங்க வேண்டும். குடியுரிமையின்றியும் மற்ற மதக்காரர்கள் வாழ ஒப்புக் கொள்ள வேண்டும் என்று கூறும் கோல்வால் கரின் சீடக் கோடியா இப்படி எழுதுகிறது?

புத்தி தெளிந்து விட்டது - உலக்கையைக் கொண்டு வா, கோவணம் கட்டிக் கொள்கிறேன் என்றானாம். - அந்தப் பட்டியலில் குருமூர்த்திகளை வைக்க வேண்டியதுதான்.

- கருஞ்சட்டை


No comments:

Post a Comment