25.08.2022 தேதியிட்ட பார்ப்பன மேலா திக்க எதிர்ப்புப் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, பத்தாண்டுகளாக பாய் விரித்து பதவியில் நீடித்த 80 வயதை கடந்த மேனாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி மூட்டை கட்டினார்.
ரூ.11,000 கோடிக்கு மேல் கடன் சொத் துக்கள் உள்ள நிறுவனத்தில் காலியாக உள்ள தலைவர் பொறுப்பிற்கு உரிய தமிழர் ஒருவரை நியமனம் செய்ய தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கிறோம்.
முத்தமிழ் அறிஞர் கலைஞரால் தொடங்கி வைக்கப்பட்ட ரெப்கோ வங்கியில் தற்போது தமிழ்நாடு அரசின் பங்கு மூலதனம் ரூ.7 கோடிக்கு மேல் உள்ளது. தமிழ்நாடு அரசு நிறுவனங்களின் வைப்பீடு சுமார் ரூ.1,500 கோடிக்கு மேல் உள்ளது. தமிழர்களை கரையேற்றவும், தமிழ்நாடு அரசின் முதலீடுகளை காப்பாற் றவும் உரியவர்களை தலைவர் பொறுப் புக்கு நியமிப்பதே சரியானது.
No comments:
Post a Comment