‘‘ஆர்.எஸ்.எஸ். அபாயம்''பற்றி அன்றே எச்சரித்தது திராவிடர் கழகம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 6, 2022

‘‘ஆர்.எஸ்.எஸ். அபாயம்''பற்றி அன்றே எச்சரித்தது திராவிடர் கழகம்!

2000 ஆம் ஆண்டு குண்டுவெடிப்புகளை அரங்கேற்றியது 

ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.வே! ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியின் ஒப்புதல் வாக்குமூலம்!

தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை

பெரியார் மண்ணான தமிழ்நாட்டை காவி மண்ணாக்கத் துடிக்கும் காவிகளின் வித்தைகளை முறியடிப்பதே முற்போக்காளர்களின் முன்னுரிமைப் பணியாகும்!

‘‘ஆர்.எஸ்.எஸ். அபாயம்''பற்றி அன்றே எச்சரித்தது திராவிடர் கழகம்!  2000 ஆம் ஆண்டு குண்டுவெடிப்புகளை அரங்கேற்றியது ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.வே:  ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியின் ஒப்புதல் வாக்குமூலம்! பெரியார் மண்ணான தமிழ்நாட்டை காவி மண்ணாக்கத் துடிக்கும் காவிகளின் வித்தைகளை முறியடிப்பதே முற்போக்காளர்களின் முன்னுரிமைப் பணியாகும்! திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

நீண்ட காலத்திற்கு முன்பே திராவிடர் கழகம் ‘‘ஆர்.எஸ்.எஸ். அபாயம்!'' பற்றி எச்சரித்தது. அது மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது.

கடந்த 4.9.2022 அன்று ‘தீக்கதிர்' வெளிவந்த செய்தியை வாசக நேயர்கள் தெரிந்துகொள்வதற்காக அப்படியே தருகிறோம்.

2000 ஆம் ஆண்டு குண்டுவெடிப்புகளை அரங்கேற்றியது ஆர்எஸ்எஸ் - பாஜகவே!

மும்பை, செப்.3- 2006 ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் நான்டெட்டில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக, ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஒருவர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில், பாஜகவை தேர்தலில் வெற்றி பெறச் செய்வதற்காக, ஆர்எஸ்எஸ் இயக்கமும், அதன் துணை அமைப்பான விஸ்வ ஹிந்து பரிசத்தும் 2000 ஆம் ஆண்டுகளில் நான்டெட் மட்டுமல்லாது நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்புகளை அரங்கேற்றியதாக குறிப்பிட்டு, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். 49 வயதாகும், யஷ்வந்த் ஷிண்டே என்ற  அந்த ஆர்எஸ்எஸ் நிர்வாகி, 2000 ஆம்  ஆண்டுகளில் நடந்த சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, 2007 மற்றும் 2008 இல் நடந்த மாலேகான் குண்டுவெடிப்பு உட்பட  நாட்டில் நடந்த பல பயங்கரவாத தாக்குதல்கள், நான் டெட் குண்டுவெடிப்பின் அதே  சதியில் இருந்து ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் திட்டமிடப்பட்டவை என்று ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

வெடிகுண்டு பயிற்சி

“இந்திரேஷ் குமார், ஹிமான்ஷு பான்சே, மிலிந்த் பராண்டே, ராகேஷ் தவாடே, ரவி தேவ் (மிதுன் சக்ர வர்த்தி) ஆகியோர் இந்த குற்றங்களில் முக்கிய சதிகாரர்கள். மிலிந்த் பராண்டே மற்றும் ராகேஷ் தவாடே ஆகியோர் ஏற்பாடு செய்த பயிற்சி முகாமில் ரவி தேவ் (மிதுன் சக்ரவர்த்தி)வெடிகுண்டு தயாரிப்பில் பயிற்சி அளித்தார்” என்று குறிப்பிட்டுள்ளார். இவர்களில், மிலிந்த் பராண்டே தற்போது விஷ்வ ஹிந்து பரிஷத்தின் ‘தேசிய அமைப்பாளராக’ உள்ளார். ‘மிதுன் சக்ர வர்த்தி’ எனப்படும் ரவி தேவ் [ஆனந்த்] - இப்போது விஷ்வ ஹிந்து பரிஷத்தின் உத்தர்கண்ட் பிரிவுக்கு தலைமை தாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2006 ஆம் ஆண்டில், மகாராஷ்டிராவின் நான்டெட் மாவட்டத்தில், விஸ்வ ஹிந்து பரிசத்தின் இளைஞர் பிரிவான பஜ்ரங் தளத்தின் தொண்டர் ஹிமான்ஷு பான்சே உட்பட இருவர் வெடிகுண்டு வெடித்ததில் இறந்து போயினர். இந்த வழக்கு தொடர்பான விசாரணையிலேயே யஷ் வந்த் ஷிண்டே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள் ளார். அந்த பிர மாணப் பத்திரத்தில், அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதியைத் தகர்க்க வெடி குண்டு தயார் செய்யும்போது, தவறுதலாக குண்டு வெடித்து, ஹிமான்ஷூ பான்சே  இறந்ததாகவும், ஹிமான்ஷூ பான்சே  இந்துத்துவா சுற்றுச்சூழல் அமைப்பில் நீண்ட கால கூட்டாளியாகவும், சக பயணி யாகவும் இருந்ததால், இது தனக்கு தெரியும் என்று ஷிண்டே தெரிவித்துள்ளார்.

ராணுவத்திலும் பயிற்சி

மேலும், 1999 ஆம் ஆண்டில், ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்)-இன் மூத்த  நிர்வாகியான இந் திரேஷ்குமாரின் அறிவுறுத்தலின் பேரில் ஹிமான்ஷு வையும், அவரது 7 நண்பர்களையும் தான் ஜம்மு விற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு ஹிமான்ஷூ பான்சே  உள்ளிட்டோர் இந்திய  ராணுவ வீரர்களிடம் நவீன ஆயுதப் பயிற்சி  பெற்றார்கள் என்று மற்றுமொரு அதிர்ச்சி தகவலையும் ஷிண்டே வெளியிட்டுள்ளார். “ஜம்முவில் உள்ள தலாப் தில்லோ என்ற இடத்தில் பயிற்சி நடைபெற்றது” என்று இடத்தையும் உறுதிப் படுத்தியுள்ளார். 

மேலும், 2003-இல் தானும், ஹிமான்ஷூ பான் சே-வும் புனேவில் உள்ள சிங்காட் அருகே நடைபெற்ற வெடிகுண்டு பயிற்சி  முகாமில் கலந்துகொண்டதாக கூறியிருக்கும் ஷிண்டே, அந்த முகாமில் தங்க ளுக்கு பயிற்சி அளித்தவர்கள் “முகாமின் முதன்மையான மற்றும் முக்கிய அமைப்பாளர்- தற்போதைய விஷ்வ ஹிந்து பரி ஷத்தின் தற்போதைய தேசிய அமைப்பா ளர் மிலிந்த் பராண்டே ஆவார்” என்றும் நபர்களைப் பட்டியலிட்டுள்ளார். தற்போது 49 வயதாகும் ஷிண்டே தனது  முதல் ஒன்பது ஆண்டுகளை ஜம்மு - காஷ்மீரில் உள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பில் இந்தி ரேஷ் குமாரின் (தற்போதைய ஆர்எஸ்எஸ் தேசிய செயற்குழு உறுப்பினர்) பயிற்சியின் கீழ் கழித்த தாகவும் கூறியுள்ளார்.

ஜம்முவில் வெடிகுண்டு சோதனைகள்

முக்கிய பயிற்றுவிப்பாளரான ‘மிதுன் சக்ரவர்த்தி’ எனப்படும் ரவி தேவ்  [ஆனந்த்] குறித்து கூறும் யஷ்வந்த் ஷிண்டே, “காலை 10 மணிக்கு முகாமுக்கு வரும் மிதுன் சக்ரவர்த்தி இரண்டு மணி நேரம் ஒவ் வொரு குழுவுக்கும் தனித்தனியாக வெடிகுண்டு பயிற்சி வழங்குவார். நாங்கள் பயிற்சி எடுத்தபோது, எங்களுக்கு வெடிகுண்டுகளை தயாரிப்பதற்காக  3-4 வகையான வெடி பொடிகள், குழாய் துண்டுகள், கம்பி கள், பல்புகள், கைக்கடிகாரங்கள் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டன. பயிற்சிக்குப் பிறகு, வெடிகுண்டுகளை பரி சோதிப்பதற் காக, ஒரு தனிமையான காட்டுப் பகுதிக்கு வாகனத்தில் அழைத்துச் செல் லப்படுவோம். அங்கு குண்டுவெடிப்பு ஒத் திகை நடக்கும். ஒரு சிறிய குழிதோண்டி,  அதில் வெடிகுண்டை டைமர் வைத்து,  அதை மண் மற்றும் பெரிய பாறைகளால் மூடி வெடி குண்டை வெடிக்கச் செய்வோம்.  அப்போது எங்களின் சோதனை வெற்றிய டைந்தது. பெரிய குண்டுவெடிப்புகள் மற்றும் கற்பாறை கள் நீண்ட தூரத்திற்கு தூக்கி எறியப் பட்டன” என்று சம்பவங்களை நினைவு கூர்ந்துள்ளார்.

ஹிமான்ஷூ உயிரிழந்தது எப்படி?

“எனினும் குண்டுவெடிப்புகளில் எனக்கு  உடன் பாடில்லை. நான் மட்டுமன்றி, கூட்டா ளியான ஹிமான்ஷு பான்சேவை-யும் குண்டுவெடிப்புகளில் ஈடுபடவிடாமல் தடுக்க முயன்றேன். ஆனால் பயிற்சிக்குப் பிறகு ஹிமான்ஷு மகாராஷ்டிராவின் மராத்வாடா பகுதியில் மூன்று குண்டு வெடிப்புகளை நிகழ்த்தினார். அடுத்ததாக அவுரங்காபாத்தில் உள்ள முக்கிய மசூதியில் ஒரு பெரிய குண்டு வெடிப்பை நடத்தத் திட்டமிட்டிருந்தார், அந்த குண்டுவெடிப்புக்காக வெடிகுண்டு தயாரிக்கும் போதுதான் அவர் 2006 இல்  நான்டெட்டில் உயிர் இழந்தார்” என்று யஷ்வந்த் ஷிண்டே விரிவாக கூறியுள்ளார்.

தனித்த நிகழ்வு அல்ல

ஷிண்டே-வின் இந்த வாக்குமூலத்தில் இடம்பெற் றுள்ள பெரும்பாலான தகவல் கள் மகாராஷ்டிர பயங்கர வாத எதிர்ப்புப் படையின் முதல் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளவைதான் என்றாலும், 2013 ஆம் ஆண்டு இந்த வழக்கை தன்வசம் எடுத்துக் கொண்ட மத்திய புலனாய்வுப் பிரிவு, 2006 நான்டெட் குண்டு வெடிப்பு தனித்த சம்பவம் என்று கூறியிருந்தது. “நகரில் உள்ள ஒரு முகாமில் ஜெலட்டின்  குச்சிகளைப் பயன்படுத்துவது தொடர்பாக  தனது இயக்கத்தினருக்கு பயிற்சி அளிக்குமாறு” மிலிந்த் பராண்டே கேட்டுக் கொண்டதாக புனேவைச் சேர்ந்த சனத்குமார் ரக்விதால் பேட் (ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி), பயங்கரவாத எதிர்ப்புப் படையிடம் ஏற்கெனவே வாக்குமூலம் அளித்திருந்தார். இதையும் தாண்டித்தான் “நான்டெட் குண்டு வெடிப்பு தனித்த சம்பவம்” என்று சிபிஐ முடிவுக்கு வந்தது. ஆனால், “நாடு முழுமைக்குமாக ஆர்எஸ்எஸ் வடிவமைத்திருந்த குண்டு வெடிப்பு சதித் திட்டத்தின் ஒருபகுதிதான் நான்டெட் குண்டுவெடிப்பு” என்று யஷ்வந்த் ஷிண்டே தற்போது கூறியிருப்பது முடிச்சுகளை அவிழ்ப்பதாக அமைந் துள்ளது.

முடிச்சுகள் அவிழ்கின்றன

அதுமட்டுமல்ல, “நான்டெட் வெடிகுண்டு தயாரிக்கும் முகாமில் இருந்த மற்ற நபர்களில் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராகேஷ் தவா டேவும் இருந்தார்” என்று ஷிண்டே கூறுவது குண்டுவெடிப்பு வழக்குகள் தொடர்பான விசாரணையில் புதிய கதவுகளை திறந்து விட்டுள்ளது. மேலும், “2000-களில் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் 2007 மற்றும் 2008 இல் மாலேகான் குண்டுவெடிப்பு உட்பட நாட்டில் நடந்த பல பயங்கரவாத தாக்குதல்கள், நான்டெட் குண்டுவெடிப்பின் அதே சதியில் இருந்து உருவானவை” என்று ஷிண்டே கூறியிருக்கிறார். இது நாடு முழுவதும் அதிர்ச்சி  அலை களை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. அவரது தகவல்கள் முன்னுக்குப் பின்  முரணின்றி சம்பவங் களோடு பொருந்திப் போகிறது. “வெடிகுண்டுகள் வைக்கும் திட்டத்தைப் பொறுத்தவரை, ஆர்எஸ்எஸ் மூத்த நிர்வாகிகள், தற்போதைய தலைவர் மோகன் பகவத் உட்பட பலரிடம் மிலிந்த்  பராண்டேவின் சூழ்ச்சி களைப் பற்றி எச்சரிக்குமாறு பேசியதாகவும், ஆனால் அவர்கள் செவிமடுக்கவில்லை'' எனவும் பிரமாணப் பத்திரத்தில் யஷ்வந்த் ஷிண்டே  குறிப்பிட்டுள்ளார். 

உண்மையில், இந்தத் தலைவர்களின் சாக்குப் போக்கான காரணங்களைப் கேட்ட  பிறகு, ஆர்எஸ்எஸ் மற்றும் விஎச்பி-யின்  மூத்த தலைவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளை மறைமுகமாக ஆதரிக்கிறார்கள் என்ற உண்மை தெரியவந்ததாக கூறும் யஷ்வந்த் ஷிண்டே, 1999-இல் மும்பைக்குத் திரும்பியதாகவும், அங்கு  பஜ்ரங் தளத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட தாகவும், எனினும், 13-14 ஆண்டுகளுக்கு முன்பே, ஆர்எஸ்எஸ் செயல்பாடுகளில் தீவிரமாக பங்கேற்பதை நிறுத்தி விட்டதாகவும், உறுப்பினராக மட்டும் தொடர்ந்த தாகவும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆதாயத்திற்காக...

மேலும் விவரிக்கும் ஷிண்டே, “நாடு முழுவதும் குண்டுவெடிப்புகளை ஏற்படுத்தும் ஆர்எஸ்எஸ் மற்றும் விஎச்பியின் திட்டம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததால், பாஜகவுக்கு அரசியல் பலன்  கிடைக்க வில்லை. அதன் விளைவாக, 2004 தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையைப் பெற்றது. எனினும், மிலிந்த் பராண்டே போன்ற முக்கிய சதிகாரர்கள் தலைமறைவாக இருந்து கொண்டு ரகசியமாக சதித் திட்டங்களைத் தொடர்ந்தனர், நாடு முழுவதும் பல குண்டுவெடிப்புகளை நடத்தினர். மேலும் காவல்துறை மற்றும் ஒரு தலைப்பட்சமான ஊடகங்களின் உதவியுடன் அவர்கள் முஸ்லிம்கள்மீது குற்றம் சாட்டினர். அது அவர்களுக்கு 2014 மக்கள வைத் தேர்தலில் உதவியது” என்று பிரமாணப் பத்திரத்தில் விவரிக்கும் யஷ்வந்த் ஷிண்டே, “2014-ல் பாஜக மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றி நரேந்திர மோடி பிரதமரானார். இதன் விளைவாக பாஜக வின் பின்புலத்தில் செயல்பட்டு வந்த விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் ஆர்எஸ்எஸ்  ஆகிய அனைத்து அழிவு சக்திகளும் திடீரென முன்களத்திற்கு வந்தன” என்று குறிப்பிடுகிறார்.

திடீரென இந்த பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டிய தேவை என்ன வந்தது? என்ற கேள்விக்கு பதிலளித்தி ருக்கும் யஷ்வந்த் ஷிண்டே, “நான் ஒரு ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்)-இன் ஆள்; இந்துத்துவா சித்தாந்தத்தில் உறுதியான நம்பிக்கை கொண்டவன்; இந்து மதம் உன்னதமான மதம்; அது பயங்கரவாதத்திற்கு எதிரானது; எனவே, ஆர்எஸ்எஸ் கொடூரமான குற்றங்களில் ஈடுபடுவதை நான் விரும்ப வில்லை. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் விஷயங்கள் மிகவும் மோசமாகிவிட்டன; அவர்கள் (பாஜகவினர்) ஆட்சியில் இருக்க மக்களை பிளவுபடுத்தி, மதத்தின் பேரால் அணி திரட்டுகிறார்கள். எனவே நான் இதைச் செய்யவேண்டும் என்று நினைத்தேன். ஆர்எஸ்எஸ் அமைப்பை சுத்திகரிக்கும் ஆர்வத்தால் உந்தப்பட்டே வாக்குமூலம் அளித்துள்ளேன்” என்றும் கூறியுள்ளார். 

மேலும், பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்வதற்கு முன்பு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியதாகவும், ஆனால் எந்த பதிலும் வரவில்லை என்றும் ஷிண்டே கூறியுள்ளார். நீங்கள் கூறுவதையெல்லாம் எப்படி நம்புவது? என்ற கேள் விக்கு, “சங்பரிவாரில் உள்ள பலருக்கும், என்னைப் போலவே தலைவர்கள்மீது வருத்தம் உள்ளது. ஆனா லும் பொறுமையாக இருக்கிறார்கள். நான் இப்போது பேசி விட்டேன். இதேபோல மற்றவர்களும் பேசு வார்கள். விரைவில் ஒரு வெடிப்பு ஏற்படுவதை நீங்கள் காண்பீர்கள். அப்போது நான் கூறியது உண்மை என்பதை அனைவரும் புரிந்துகொள்வார்கள்” என்றும் ஷிண்டே குறிப்பிட்டுள்ளார்.

நன்றி: ‘தீக்கதிர்' 4.9.2022

அருமை வாசகப் பெருமக்களே,

இப்படி தாங்களே பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு ஆனால், எப்படியோ வித்தைகள், உத்திகள், எதிர்க்கட்சிகளின் பலவீனங்கள், பதவியாசை உள்ள வர்களின் விலை நிர்ணயம்மூலம் ஆட்சிகளில் அமர்ந்து, மக்கள் வாக்களித்து தேர்வு செய்யும் எதிர்க்கட்சிகளின் குறிப்பாக சமதர்ம, மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசுத் தத்துவத்தினை வலியுறுத்தும் கொள்கை கொண்ட ஆட்சிகளை கவிழ்த்தும், பதவி பலம், பண பலம், ஊடக பலம், அதிகார வர்க்க பலம், அதன் அமைப்புகளையும் வளைத்துப் போட்டுவிட்ட அணுகுமுறைமூலம் - அரசமைப்புச் சட்டத்தின் ஜன நாயக நெறிமுறைகளை மாற்றிடவும், மனுதர்ம சனா தனத்தை ஆட்சி பீடமேற்றிட (இப்போது மறைமுக முயற்சிகள் நடந்து வருகின்ற நிலையில்) எத்தகைய பயங்கரவாதத்தையும் நிகழ்த்தி, படித்தவர்கள், முற் போக்குச் சிந்தனையாளர்களைக் குற்றவாளிகளாக்கி சிறையில் அடைக்கும் கொடுமை தொடரும் நிலையில், மக்களுக்கு ‘‘ஆர்.எஸ்.எஸ். அபாயம்!'' என்று பல காலம் முன்பே எச்சரித்த இயக்கம் திராவிடர் கழகம் என்ப தோடு, அந்த அமைப்பினர் தமிழ்நாட்டிலும் எப்படி யாவது காலூன்றி கொள்கை வலிமை, மக்களின் பேரா தரவு பெற்ற பெரியார் மண்ணைக் காவி மண்ணாக்கிட - சாம, பேத, தான, தண்ட மனுதர்ம முறைகளை - வித்தைகளை - விதைக்கத் தொடங்கிவிட்டனர்.

இந்தப் பேராபத்தினை ‘‘கூலிக்கு விலை போகும் விபீடணத் தமிழர்கள்'' உள்பட அனைவருக்கும் விளக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்துவது அனைத்து முற்போக்காளர்கள், ஜனநாயகப் பாதுகாவலர்கள், மனித உரிமைக் காவலர்கள், பண்பாட்டுப் போராளிகள் அனை வரது அவசரக் கடமை அல்லவா?

முற்போக்காளர்களின் முன் உள்ள முன்னுரிமைப் பணி!

தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல்' ஆட்சிக்கு எதிராக இந்த வித்தைகளை ஏவிவிட்டால், இதையும் வளைக் கலாம் என்று அவர்கள் கட்டும் மணல் கோட்டையை சரியச் செய்யவேண்டிய முக்கிய பணியே இன்றைய முற்போக்காளர்களின் முன் உள்ள முன்னுரிமைப் பணி.

பட்டிதொட்டிகள், கிராமங்கள், நகரங்கள், வீதிகள் அனைத்தும் இந்த ஆபத்துபற்றி விளக்கிட, திண்ணைப் பிரச்சாரம் முதல் பொதுக்கூட்டங்கள் அனைத்தையும் அசராமல் செய்யுங்கள்.

‘போர்க் கால அடிப்படை' என்பதைவிட, தீயணைப்பு வீரர்களின் அவசரப் பணிபோல ஆற்ற முன்வாருங்கள்.

இதில் சமரசம் கூடாது; கூடவே கூடாது!

இன்றேல், பல தலைமுறை பின்னே - பழைய வருணதர்ம அடிமைகளாகி விடும் நிலை நம் கதவு களைத் தட்டுவதோடு, திறந்துவிடவும் கூடும். இதில் சமரசம் கூடாது; கூடவே கூடாது.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
6.9.2022
சென்னை


No comments:

Post a Comment