பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை நீட்டிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 28, 2022

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை நீட்டிப்பு

சென்னை, செப்.28 பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு விடுமுறையை நீட்டித்து கல்வித்துறை உத்தரவிட்டு இருக்கிறது.  

இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவொளி ஆகி யோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-  

காலாண்டு தேர்வு முடிவுற்று அளிக்கப்பட வேண்டிய விடுமுறை குறித்து கீழ்கண்டவாறு அறிவுரைகள் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்படு கிறது. வருகிற 30-ஆம் தேதி காலாண்டுத் தேர்வு முடிந்தவுடன், அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை விடுமுறை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதற்கு பதிலாக ஈடுசெய்யும் விடுப்பு அளிக்குமாறு தொடர்ந்து ஆசிரியர் சங்கங்களும், ஆசிரியர்களும் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அடுத்த மாதம் 6, 7, 8 ஆகிய 3 நாட்களும் ஈடுசெய்யும் விடுப்பாகக் கருதப்படும். எப்போது பள்ளிகள் திறப்பு? பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்புகளுக்கு அடுத்த மாதம் 10-ந்தேதியன்று பள்ளிகள் திறக்கப்படும். தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையில் கையாளும் ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் 10, 11, 12-ஆம் தேதிகளில் எண்ணும் எழுத்தும் 2-ஆம் கட்ட பயிற்சி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனரின் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு நடத்த இருப்பதால், 1-ம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் அடுத்த மாதம் 13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

No comments:

Post a Comment