சென்னை,செப்.25- பெரியார் பன்னாட்டு மய்யம்- அமெரிக்கா, ஆய்வு விசாரணைக்கான மய்யம்- கனடா கிளை, கனடா மனிதநேயர் அமைப்பு, டொராண்டோ மனித நேயர் சங்கம் இணைந்து சமூகநீதிக்கான பன்னாட்டு பெரியார் மனிதநேய மாநாடு கனடா நாட்டில் டொராண் டோவில் நேற்று (24.9.2022) இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கியது. டொராண்டோவில் மாநாட்டு நிகழ்வுகள் தொடங்கிய அதே நேரத்தில் சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் மாநாட்டின் நிகழ்ச்சிகளை கவனிக்க பார்வையாளர்கள் ஆர்வத்துடன் திரண்டிருந்தனர். திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், துணைப்பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, சி.வெற்றிசெல்வி, வழக்குரைஞர் ம.வீ.அருள் மொழி, பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், செயலாளர் கோ.நாத்திகன், சு.மோகன்ராஜ், மா.குணசேகரன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, கோ.வீ.ராகவன், மயிலை டி.ஆர்.சேதுராமன், வடசென்னை மாவட்டத் துணைத் தலைவர் கி.இராமலிங்கம், அமைப்பாளர் புரசை அன்பு செல்வன், ஆவடி மாவட்ட செயலாளர் க.இளவரசன், அமைப்பாளர் உடுமலை வடிவேல், ஆ.வெ.முரளி, இளை ஞரணி பொழிசை கண்ணன், சோ.சுரேஷ், தளபதி பாண்டி யன், க.கலைமணி, சைதை தென்றல், விழிகள் வேணு கோபால், செங்கை சுந்தரம் பெரியார் நூலக வாசகர் வட்டம் ஜனார்த்தனம், தென்சென்னை பகுத்தறிவாளர் கழகம் மாணிக்கம், ச.இராஜசேகரன், மனோகரன், த.க.நடராசன், வெ.ஞானசேகரன் உள்பட பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
Sunday, September 25, 2022
காணொலியில் ஆர்வத்துடன் தோழர்கள் பங்கேற்பு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment