ரயில்வே குரூப் ‘டி’ தேர்விற்கு வெளிமாநிலங்களில் தேர்வு மய்யம்: தமிழ்நாடு தேர்வர்கள் அதிர்ச்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 1, 2022

ரயில்வே குரூப் ‘டி’ தேர்விற்கு வெளிமாநிலங்களில் தேர்வு மய்யம்: தமிழ்நாடு தேர்வர்கள் அதிர்ச்சி

சென்னை, செப்.01 தமிழ்நாட்டில் ரயில்வே குரூப் ‘டி’ தேர்வுக்கு விண்ணப் பித்த தேர்வர்கள் பலருக்கு ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் தேர்வு மய்யங்கள் அமைக்கப்பட்டுள்ளதால், தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் சார்பில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 769 காலியிடங்களை நிரப்ப குரூப் ‘டி’ தேர்வு மூன்று கட்டமாக நடத்தப்படுகிறது. இதில், முதல் கட்ட தேர்வு முடிந்துள்ள நிலையில், வட மத்திய ரயில்வே (அலகா பாத்), வடமேற்கு ரயில்வே (ஜெய்ப்பூர்), தென்கிழக்கு மத்திய ரயில்வே (பிலாஸ் பூர்) ஆகியவற்றுக்கான இரண்டாவது கட்ட தேர்வு கடந்த 26ஆம் தேதி முதல் துவங்கி நடந்து வருகிறது. இதையடுத்து, தெற்கு ரயில்வே (சென்னை), வடக்கு ரயில்வே (டில்லி), வடகிழக்கு எல்லை ரயில்வே (கவுகாத்தி), கிழக்கு கடற்கரை ரயில்வே (புவனேஸ்வர்) ஆகியவற்றுக்கு மூன்றாவது கட்ட தேர்வு வரும் 8ஆ-ம் தேதி முதல் 19ஆ-ம் தேதி வரை நடத்தப்படுகிறது.

இந்த குரூப் டி தேர்வு கணினி அடிப்படையில் காலை, மதியம், மாலை என மூன்று பிரிவுகளில் நடக்கிறது. இந்த தேர்வுக்கான அனுமதிச்சீட்டு தேர்வுக்கு நான்கு நாட்களுக்கு முன்பு வெளியிடப்படும். இருப்பினும், தேர்வு மய்யங்கள் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதில், தமிழ் நாட்டைச் சேர்ந்த தேர்வர்கள் பலருக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மய்யங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மோகனுக்கு ஆந்திர மாநிலம் கடப்பாவில் தேர்வு மய்யம் போடப் பட்டுள்ளது. இவர், சேலம், சென்னை பகுதியில் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்த நிலையில், தேர்வு மய்யம் ஆந்திர மாநிலத்தில் போடப்பட்டுள்ள தால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இவரைப் போல் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த சதீஷுக்கு ஆந்திரா மாநிலம் கர்நூல் பகுதியில் தேர்வு மய்யம் போடப்பட் டுள்ளது. இது போல் தமிழ்நாட்டைச் சேர்ந்த பலருக்கு ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் தேர்வு மய்யம் அமைக்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரயில்வே குரூப் ‘டி’ தேர்வுக்காக நீண்ட நாட்கள் படித்து வருவதாகவும், எனவே எங்கு தேர்வு மய்யம் அமைத்தாலும் எப்படி யும் எழுதியாக வேண்டிய கட்டாய நிலையில் இருப்பதாகவும் தேர்வர்கள் கவலை தெரிவித்தனர். தமிழ்நாட்டில் இருந்து ரயில்வே பணிக்கு விண்ணப் பிக்கும் தேர்வர்களுக்கு தொடர்ந்து வெளிமாநிலங்களில் தேர்வு மய்யங்கள் அமைக்கப்பட்டு வருவதால், ரயில்வே பணியில் சேருவதில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது. தமிழ்நாட்டு மாணவர்களை வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


No comments:

Post a Comment