இந்து மதத் தத்துவமும் மனுதர்மமும்
டாக்டர் பி. ஆர். அம்பேத்கர்
பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு - முதல் பதிப்பு 1998
பக்கங்கள் 60 - நன்கொடை ரூ. 45
- இந்தியாவின் இணையற்ற சிந்த னையாளர் டாக்டர் அம்பேத்கர்!
ஜாதியின் கொடுமைகளை, தானே அனுபவித்தவர். தாழ்த்தப்பட்ட சமூகத் தினருக்காக தனது கல்வியையும் அறிவை யும் பயன்படுத்தி அவர்களை அடிமைத் தளையிலிருந்து விடுவிக்க தன் வாழ் நாளை அர்ப்பணித்தவர்!
- தென்னகத்தின் தந்தை பெரியாரும் வடபுலத்தின் டாக்டர் அம்பேத்கரும் ஒரே கொள்கைக்காக பாடுபட்டவர்கள்! சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரத்திற் காக குரல் கொடுத்தவர்கள் . இருவரும் வர்ணாசிரமம், மனுநீதிக்கு எதிராக போராடியவர்கள்!
பெரியாரும் அம்பேத்கரும் மனுநீதி நூலை எரித்து சரித்திரம் படைத்தவர்கள்!
- இந்த சிறிய நூலில் - அம்பேத்கரின் நூல் தொகுப்பு 6ஆம் தொகுதியிலிருந்து, வர்ணாசிரமத்தை அதிகார பூர்வமாக கூறி டும், ' மனுஸ்மிருதி ' பற்றி அம்பேத்கர் விளக் கமாக தந்துள்ள கருத்துக்களை தொகுத்து ஒரு ஆவணமாக தரப்பட்டு நீள்ளது!
நூலின் பொருளடக்கம் :
சமூக சமத்துவத்தை இந்து மதம் அங்கீகரிக்கிறதா? | மனுவின் மத சமத்துவ மின்மை: சான்றுகள் | இந்து மதத்தில் சுதந்திரம் இல்லை | இந்து மதம் சகோ தரத்தை ஏற்கிறதா? | இந்து சமூக அமைப் பில் பிராமணர்க்குரிய நிலைபற்றி மனு |
- சமூக சமத்துவத்தை இந்து மதம் அங்கீகரிக்கிறதா ? என்ற கட்டுரையில் அம்பேத்கர் மிகத் தெளிவாக விளக்கு கிறார் - "பல்வேறு ஜாதிகளும் ஒரே தரத் தில் கிடைமட்ட வரிசையில் அருகருகே அமர்த்தப்படவில்லை! பல்வேறு சாதிக ளும் ஒன்றன் மீது ஒன்றாக செங்குத்தான வரிசையில் அமர்த்தப் பட்டதொரு அமைப்பு! "
- " இந்த வருணத்தின் புனிதத்து வத்தை மனு போதித்தார்! ஆகவே வரு ணமே ஜாதி அமைப்பின் தாய்! ஜாதியின் தோற்றத்திற்கான கர்த்தாவாக மனு விளங் கினார்! " ... மனித நேயத்தோடு சிந்திக்கும் எவரும் ஏன் மனுநீதியை எதிர்க் கின்றார்கள் என்பதற்கான காரணம் இதுவே!
- அம்பேத்கர் மேலும் விளக்குகிறார் - " மனுவின் திட்டப்படி பிராமணன் முதல் தரத்தில் வைக்கப்பட்டான் . அதற்கு அடுத்து க்ஷத்திரியர். அவருக்கு கீழே வைசியர். அவருக்கு கீழே சூத்திரர்கள் . சூத்திரர்க்கும் கீழே ஆதி சூத்திரர்கள் ( தீண்டாதவர் ) " ...
- " இந்த தரவரிசை அமைப்பானது சமத்துவமற்ற கோட்பாட்டினை எடுத்து ரைப்பதாகும் . எனவே இந்து மதம் சமத்து வத்தை அங்கீகரிக்கவில்லை! " ..இந்த கார ணத்தினால்தான் அம்பேத்கர் இந்து மதத்தை வெறுத்து புத்த மதத்தை தழு வினார்!
அம்பேத்கரின் மத மாற்றத்திற்கு மனுநீதி காரணமில்லையா ?
- டாக்டர் அம்பேத்கர் இந்த கட்டு ரைகளில் சான்றுகளாக தந்த மனுநீதி சுலோகங்களில் சிலவற்றை அதன் தொகுதி மற்றும் சுலோக வரிசை எண்ணுடன் தந்துள்ளேன் .
இன்றைய பார்ப்பனீய ஆதரவு மன நிலையில் உள்ளோருக்கு, இந்த ஆதாரங்கள் பதில் சொல்லட்டும்!
- சூத்திரன் இருபிறப்பாளரை ( பிராம ணரை) கடுஞ் சொற்களால் நிந்தித்தால், அவன் நாக்கை அறுக்க வேண்டும்! ஏனெனில் பிரமனின் கீழான பாகத்தில் (பாதத்தில் ) அவன் பிறந்தவன்! - (8 : 270)
- பிராமணன் எத்தகைய பாவமோ கலப்போ செய்த போதிலும் அவனைக் கொல்லக் கூடாது! ஏனையோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்! - ( 8 : 379 )
- பிராமணனைக் கொல்வதைவிட உலகத்தில் பெரியதொரு பாவம் வேறு இல்லாததால், பிராமணனைக் கொல்வது பற்றி அரசன் மனதளவில் நினைக்க கூடாது! - ( 8 : 381 )
- சூத்திரன் தன்னால் பொருள் திரட்ட முடியும் போதும் அவ்வாறு திரட்டி செல்வம் சேர்க்க கூடாது! ஏனெனில் செல்வந்தனான சூத்திரன் பிராமணர்களுக்கு துன்பம் தரு கிறான்! - ( 10 : 129 )
- வேதம் கற்றலும் கற்றுத்தரலும் கட வுளால் பிராமணர்களுக்காக ஒதுக்கப்பட்ட வையாகும்! - ( 1 : 88 )
- சூத்திரர்கள் முன்னிலையில் இரு பிறப்பாளர் வேதத்தை படித்துக் காட்ட கூடாது! - ( 4 : 99 )
- சூத்திரன் மனப்பாடம் பண்ணும் நோக்கத்துடன் வேதம் படிப்பதை கேட்டால், அவனது காதுகளில் காய்ச்சிய ஈயத்தையும் அரக்கையும் ஊற்ற வேண்டும்! வேதத்தில் முழுத் தேர்ச்சி அடைந்தால் அவனது உடம்பை துண்டு துண்டாக வெட்டிச் சிதைக்க வேண்டும்! - ( 12 : 4 )
- பார்த்தீர்களா மனுவின் ஜாதி வெறியை! பார்ப்பனீயத்தின் கொடூரமான முகம் தான் மனுநீதி! சூத்திரன் வேதம் படித்து விடக்கூடாது என்பதற்காக தான் அவனை அர்ச்சகராக அனுமதிக்க மறுக் கிறார்கள்.. பார்ப்பனர்கள் சொல்லும் ஆகம விதிகள் என்பது மனுநீதியையும் சேர்த்து தான்!
- பிராமணர்கள் மனுநீதி நூலுக்கு ஏன் வக்காலத்து வாங்குகிறார்கள் என்றால் - மனுநீதி சாஸ்திரங்களில் அவர்களை இமயத்தின் உச்சியில் உட்கார வைத்து மற்ற ஜாதியினரை அவர்களுக்கு அடி பணிய செய்கிறது.. ஜாதிய ஏற்றத்தாழ்வை ஒரு கட்டுக் கோப்பான நிறுவனமாக்கியது மனுநீதியே!
- மனுநீதி கூறுகிறது - பிறவியினால் உயர்ந்த இடத்திலிருந்து தோன்றியதாலும், உயர்ந்த குலத்தாலும், வேதங்களை பிழையறக் கற்றுணர்ந்த அறிவினாலும், பூணூல் தரித்த சிறப்பினாலும், பிராமணன் அனைத்து வருணத்தாருக்கும் தலைவனாக உள்ளான்! - ( 10 : 3 )
- அரசன் காலையில் துயிலெழுந்து, மூன்று வேதங்களையும் அற நூல்களையும் ஆய்ந்துணர்ந்த பிராமணரை வணங்கி, வழிபட்டு, அவர் அறிவுரையை பின்பற்றி நடப்பானாக! - ( 7 : 37 )
- இவ்வாறு சூத்திரர்களை அடிமைக ளாகவும் பிராமணர்களை அரசருக்கும் மேலாக வைத்து, சமூக அமைப்பை கட்டி காத்து வருவது மனுநீதி சாஸ்திரம் என்பதை அம்பேத்கர் பல ஆதாரங்களோடு விளக்கு கிறார்!
- இறுதியாக இந்து மதம் பற்றி டாக்டர் அம்பேத்கர் சொன்னதை கேளுங்கள் :
" இந்து மதத்தின் தத்துவம் இத்தகை யதுதான்! அது உயர்ந்த ஜாதி மனிதனின் சொர்க்கம் ; சாமானிய மனிதனின் மீள முடியாத நரகம்! " ...
தி வர்ணாசிரமம் பற்றி நச்சென்று நாலு வரிகளில் நான் சொல்வது :
தி பிறப்பின் போதே ஜாதியை திணித்தது - வர்ணாசிரமம்!
திபிறந்த பிறகோ ஜாதியால்
பிரித்தது - வர்ணாசிரமம்!
தி சனாதனம் சாஸ்திரங்கள்
தந்ததோ - வர்ணாசிரமம்!
தி வர்ணாசிரம சாஸ்திரங்கள்
தருவதோ - வாழ்வில் சிரமம்!
- பொ. நாகராஜன்,
பெரியாரிய ஆய்வாளர்,
No comments:
Post a Comment