பாலக்காடு, செப்.27 நடைப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, பள்ளிச் சிறுவனுடன் கால்பந்து விளையாடியகாட்சிப் பதிவு இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. இந்திய மக்களை ஒன்றிணைக்கும் விதமாக காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கேரள மாநிலம் பாலக்காட்டில் நடைப்பயணத்தின்போது கால்பந்து குழுவின் மாணவர்கள் ராகுல்காந்தியுடன் சேர்ந்து நடைப்பயணத்தில் பங்கேற்றனர். அவர்களுடன் சில விநாடிகள் ராகுல்காந்தி கால்பந்து விளையாடிய காட்சி இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
Tuesday, September 27, 2022
நடைப் பயணத்தின்போது சிறுவனுடன் கால்பந்து விளையாடிய ராகுல் காந்தி
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment