ஆ.இராசா இப்படிப் பேசலாமா? "அத்திரிபாச்சா கொழுக் கட்டை!" என்று துள்ளிக் குதித்த கூட்டம் கடைசியில்
ஆ. இராசா வழிக்கே வந்து சலாம் போட்டு விட்டது.
நேற்று வெளிவந்த 'துக்ளக்' 11ஆம் பக்கத்தைப் பாருங்கள்.
கேள்வி: 'நீ கிறிஸ்தவனாக, இஸ்லாமியனாக, பெர்சியனாக, இல்லை என்றால் ஹிந்துவாகத்தான் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்கிறது' என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா கூறியுள்ளார். அவ்வாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளதா?
பதில்: அப்படிக் கூறுவது உச்சநீதிமன்றம் அல்ல, நமது அரசியல் சாஸனம். அதற்கு விசுவாசத்துடன் இருப்பேன் என்று அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் அதன்கீழ் உறுதிமொழி எடுத்திருக்கிறார் ஆ. இராசா.
('துக்ளக்' 5.10.2022 பக்கம் 11)
உச்சநீதிமன்றம் சொன்னதா, அரசியல் சாசனம் சொன்னதா என்பதல்ல பிரச்சினை - இன்னும் சொல்லப் போனால்
ஆ. இராசா சொன்னது மேலும் வலிமை பெற்றதாகி விட்டது.
ஆக, 'ஆ.இராசா சொன்னது உண்மை - உண்மை - உண்மைதான்!' அரசியல் சாசனத்தில் உளளதைத்தான்
ஆ. இராசா கூறியுள்ளார் என்று சலாம் போட்டு ஒப்புக் கொண்டு விட்டார் கோயபல்சு குருமூர்த்தி. ஹி.... ஹி!
No comments:
Post a Comment