‘தீக்கதிர்' நாளேடு அதன் வைர விழாவை - 60 ஆம் ஆண்டை கொண்டாடுகிறது; அது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.எம்.) அதிகாரப்பூர்வ ஏடு. அதன் இலக்குகள் ‘‘அனைத்து மக்களுக்கும் அனைத்தும்'' என்ற பொதுவுடைமை, பொது உரிமை, சமத்துவம், சுயமரியாதை, சமூகநீதிக் கொள்கை இலக் குகளைக் கொண்டே உழைக்கும் வர்க்கத்தினரால் - ஒப்பற்ற ஆதரவினால் நடத்தப்படும் நாளேடு.
ஓர் அரசியல் கட்சியின் நாளேடு, மதுரை, சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில் நான்கு பதிப்பு நடத்திடும் சாதனை சரித்திரத்திற்குரிய தோழமை முற்போக்கு ஏடு.
அது நாளும், நாளும் போடும் எதிர்நீச்சலில் வெற்றி பெற்று, மக்கள் நலனுக்கான போராட்ட உணர்வின் ஆயுதமாக எப்போதும் திகழவேண்டும் என்று வாழ்த்துகிறோம்.
உழைக்கும் தோழர்களின் வியர்வைத் துளியே அதன் ஆதரவுக்குடை!
சமூகப் புரட்சிக்கு வித்திடும் இந்த சரித்திர நாளேட்டுக்கு அதன் சக போராளி ஏடான ‘விடுதலை' தனது மகிழ்ச்சி கலந்த வாழ்த்துகளை அளிப்பதில் மன நிறைவும், பெருமிதமும் அடைகிறது!
கி.வீரமணி
ஆசிரியர்,
விடுதலை
சென்னை
27.9.2022
No comments:
Post a Comment