சேதுபாவாசத்திரம் ஒன்றிய, நகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 15, 2022

சேதுபாவாசத்திரம் ஒன்றிய, நகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

 பேராவூரணி, செப். 15- பேராவூரணி சேதுபாவாசத்திரம் ஒன்றிய நகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 11.09.2022 அன்று மாலை 5 மணி அளவில் பேராவூரணி தந்தை பெரியார் படிப்பகத்தில் பட்டுக்கோட்டை கழக மாவட்ட செயலாளர் மல்லிகை புரவலர் வை.சிதம்பரம் தலைமையிலும் திராவிடர் கழக பொதுக்குழு உறுப் பினர் பெரியார் பெருந்தொண்டர் அரு நல்லதம்பி முன்னிலையிலும் நடைபெற்ற போது நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம்  எண்  1 : 

உலகின் ஒரே பகுத்தறிவு நாள் ஏடான  விடுதலைநாளிதழ் தொடங்கப்பட்டு 88 ஆண்டுகளில் அறுபது ஆண்டு தொடர்ந்து ஆசிரியராக சிறப்பாக பணியாற்றி வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பணியை பாராட்டி 60,000 சந்தா அளிப்பது என்ற மதுரை திராவிடர் கழக பொது குழு தீர்மானபடி இரவு பகல் பாராது உழைத்த தமிழர் தலைவர் ஆசிரியர் மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக இளைஞர் அணி மாணவர் கழக மகளிர் அணி வழக்குரைஞர் அணி தொழிலாளர் அணி பகுத்தறிவா ளர் கழகம் ஆசிரியர் அணி பொறுப் பாளர்கள் தோழர்கள் அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கும் இக்கூட்டம் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது 

தீர்மானம் எண் 2 : 

தந்தை பெரியார் அவர்களின் 144ஆவது பிறந்தநாள் விழாவை ஒட்டி பேராவூரணி சேது பாவா சத்திரம் ஒன்றியங்களில் உள்ள தந்தை பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவிப்பது என்றும் கிளைக் கழகம் தோறும் திராவிடர் கழகத்தின் லட்சிய கொடியினை ஏற்றி இனிப்புகள் வழங்கி தந்தை பெரியார் அவர்களின் படங்களை அலங்கரித்து வைப்பது எனவும் இக்கூட்டம் ஒரு மனமாக முடிவு செய்கின்றது 

தீர்மானம் எண் 3 

தந்தை பெரியார் அவர்கள் பிறந்த நாள் தமிழ்நாடு அரசினால் அறிவிக்கப்பட்ட சமூக நீதி நாள் ஆன செப்டம்பர் 17ஆம் நாள் அன்று இருசக்கர வாகனங்களில் சென்று கிளைக் கழகம் தோறும் திராவிடர் கழக கொடி ஏற்றுவது என இக்கூட்டம் ஒருமனதாக  முடிவு செய்கின்றது கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துகள் தெரிவித்த தோழர்கள் திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் பேராவூ ரணி இரா நீலகண்டன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக புரவலர் விடுதலை வாசகர் வட்ட தலைவர் வேலு, மேனாள் மாவட்ட பகுத்தறி வாளக் கழக செயலாளர் பேராசிரி யர் முனைவர் கரு. கிருட்டின மூர்த்தி, மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் சோம. நீலகண்டன், சேதுபாவாசத்திரம் ஒன்றிய திரா விடர் கழக தலைவர் ஜெகநாதன், ஒன்றிய திராவிடர் கழக அமைப் பாளர் பள்ளத்தூர் சண்முகவேல், ஒன்றிய பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் குறிச்சி, கனக ராமச்சந்திரன், நகர திராவிடர் கழக செயலாளர் சந்திரமோகன், மேனாள் ஒன்றிய இளைஞரணி தலைவர் சக்திவேல் சேதுபாவா சத்திரம் ஒன்றிய இளைஞரணி தலைவர் ரங்கநாதன் என்கின்ற வசி, வளப்பிரமன்காடு அறிவுச் செல்வன் மற்றும் ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டு சிறப் பித்தனர்.


No comments:

Post a Comment