கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாததுகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 27, 2022

கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாததுகள்!

‘‘2024 நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து தமிழ் நாட்டில் சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடந்தால் நாங்கள் பொறுப்பல்ல'' என்று தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை பேசியிருக்கிறார்.

இதன்மூலம் என்ன தெரிவிக்கிறார்?

சகல சர்வாதிகாரமும் இவர் சுண்டு விரலுக்குள் பதுங்கி இருக்கிறதோ!

ஜனநாயகமாவது - வெங்காயமாவது என்கிற வெறித் தனம் இவர்களை ஆட்டிப் படைக்கிறதோ!

ஒரு சட்டப்பேரவைத் தேர்தலில்கூட ஜெயிக்க முடியாத பேர்வழிகளுக்குப் பேச்சைப் பாரு!

கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாத ஆள் - கோபுரத் தில் ஏறி அந்தர்பல்டி அடிக்கப் போகிறாராம்! எதையாவது உளறிக் கொட்டி, அதை ஏடுகளில் வெளிவரச் செய்து, மேலிடத்திடம் ‘சபாஷ்' பெற்று, முருகனுக்கு அடித்த லாட்டரிபோல, ‘பதவி கிடைக்காதா?' என்று கருதுகிறார் போலும்!

No comments:

Post a Comment