சுயமரியாதைத் தீப்பந்தம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 17, 2022

சுயமரியாதைத் தீப்பந்தம்

தன்நிலை தெரியாது

தவித்துக் கொண்டிருந்த

தமிழருக்கு அவர் தம்

தகுதியை உணர்த்தினார்!


பலம் பெற பகுத்தறிவு ஊட்டினார்

நலம் தரும் நாத்திகம் காட்டினார்

சுயமரியாதை வாழ்வே

சுக வாழ்வு என்று நிலை நாட்டினார்!


தொண்டு செய்து பழுத்த பழம்

தொல்லைகள் பல கண்ட கிழம்

அத்தனைக்கும் பிறகும்

அசராமல் நின்ற அய்யா

அறிவுச் சூரியன்!


மூத்திரச் சட்டியைத் தூக்கினார்

சூத்திரப் பட்டத்தைப் போக்கினார்

இழிநிலையில் இருந்து

இந்நிலைக்கு எம்மை உயர்த்திய

கிழவனே,  நீர் தான் எம் கிழக்கு

உங்கள் கனவுகளை

உண்மையாக்குவதே எமது இலக்கு!


அன்று நீங்கள் ஏந்திய

அந்த சுயமரியாதைத் தீப்பந்தம்

எங்கள் கைகளில் இன்று - அது

என்றும் ஒளிரும் வென்று!!


- இராம. வைரமுத்து, 

வழக்குரைஞர், மதுரை


No comments:

Post a Comment