தினமலரில் உங்கள் இடம் என்ற பகுதியில் ஒரு கடிதம் வரும். அதனை எழுதியவரின் பெயர், ஊர் எல்லாம் இருக்கும். அதே கடிதம் அதன் காலைக் கதிர் ஏட்டில் வெளிவரும். அதில் எழுதியவர் பெயரும், ஊரும் வேறாக இருக்கும்.
எடுத்துக்காட்டுக்குச் சில:
தினமலர் 31.1.2004
தலைப்பு: "பாடம் புகட்டுவோம் ராமதாசுக்கு"
எழுதியவர்: ஆர். ராஜகோபால் விருதுநகரிலிருந்து...
காலைக்கதிர் 4.2.2004
தலைப்பு: "பலத்தைக் காட்டுவோம் ராமதாசுக்கு"
எழுதியவர்: மு. ரஜினிபித்தன், கரூர்
இரண்டும் அட்சரம் பிறழாமல் அப்படியே வெளியிடப்பட்டுள்ளது.
தினமலர் 30.1.2004
தலைப்பு: "ரஜினி ரசிகர்களே - எம். சுரேஷ் கடலூரிலிருந்து"
காலைக் கதிர் 3.2.2004
தலைப்பு : "ராமதாசுக்கு பாடம் புகட்டுவோம்"
எழுதியவர்: ம. முத்துக்குமார் ஈரோடு
இரண்டும் அட்சரம் அரைப்புள்ளி மாறாமல் அதே மேட்டர். எடுத்துக்காட்டுக்கு இவை.
தினமலரின் ஆள் மாற்றுவேலை; திரிபு திரிபுதாள பித்தலாட்டம் புரிகிறதா?
No comments:
Post a Comment