மோடி தலைமையிலான ஆட்சியில் தேர்தல் ஆணையத்தின் நேர்மை கேள்விக்குறியாகியுள்ளது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 28, 2022

மோடி தலைமையிலான ஆட்சியில் தேர்தல் ஆணையத்தின் நேர்மை கேள்விக்குறியாகியுள்ளது!

 மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண்

மும்பை,செப்.28- மோடி தலைமையி லான ஆட்சியில், கடந்த ஆறேழு ஆண்டுகளில் தேர்தல் ஆணையத் தின் நேர்மை பெரும் கேள்விக் குறியாகி விட்டது; நீதித்துறை, ஊடகங்கள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. விசாரணை அமைப் புகள் ஆட்சியாளர்களின் ஏவல் அமைப்புகளாக மாறிவிட்டன என்று மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் கூறியுள்ளார். 

மும்பையில், மராத்தி நாளிதழ் ஏற்பாடு செய்த கருத்தரங்கு ஒன்றில், ‘’ஜனநாயகத்தின் முன் உள்ள சவால்கள்’’ என்ற தலைப்பில் பிர சாந்த் பூஷண் பங்கேற்று பேசியுள் ளார். அதில் அவர் மேலும் பேசி யிருப்பதாவது: 

“கடந்த சில ஆண்டுகளாகவே தேர்தல்  ஆணையத்தின் செயல் பாடுகள் சந்தேகத்திற்கு உள்ளாகி இருக்கின்றன. தேர்தல்  ஆணையம் நியாயமாகத்தான் நடந்து  கொள் கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் ஆளும் கட்சியை சேர்ந்த பெரிய தலைவர்கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறும்போது வாய் மூடி தேர்தல் ஆணையம் மவுனம் காக்கிறது. ஆனால், எதிர்க் கட்சிகளை சேர்ந்த தலைவர்களுக்கு எதிராக துரிதமாக நடவடிக்கை எடுக் கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த பாரபட்சத்தை பல ஆண்டு களாக பார்த்து வருகிறோம்.

டி.என்.சேஷன் தலைமை தேர்தல் ஆணையரான பிறகு பல ஆண்டுகளாக தேர்தல் ஆணையம் நியாயமாகவும் பாரபட்சம் இன்றியும் நடந்து கொண்டதை நாம்  பார்த் தோம். ஆனால், கடந்த ஆறு முதல்  ஏழு ஆண்டுகளாக தேர்தல் ஆணையத்தின் நேர்மை பெரும் கேள்விக்குறியாகி யுள்ளது. தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் எப்போது முடிவு செய்யும் என்று முன்பெல்லாம் அரசுக்கே தெரியாது. ஆனால்,  தற்போது, ஆளும் கட்சி களைச் சேர்ந்த பிரதிநிதிகளே தேர் தல் எப்போது நடக்கும் என்று சொல் கின்றனர். சுதந்திரமான தேர்வுக்குழு இல்லை. இவர்கள் குறிப்பிடும் தேதி யைத்தான் தேர்தல் ஆணையமும் அறிவிக்கிறது. தேர்தல் ஆணையம் இனியும் நியாயமாக இருக்காது. ஏனென்றால், தேர்தல் ஆணையத் தின் அதிகாரிகள் அரசாங்கத்தா லேயே தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கென சுதந்திரமான தேர்வுக்குழு இல்லை.

தற்போது அரசு என்ன செய்கிறது என்றால் தேர்வு செய்யப்படும் அதி காரிகள் பலரும் குஜராத்தை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். இவர்களும் அரசாங்கம் சொல்வதை கேட்கக் கூடியவர்களாக இருக்கிறார் கள். ஜனநாயகத்தின் முன்னுள்ள பிரச்சினையாக இதுவும் உள்ளது.  சட்டம் மற்றும் நிர்வாகத்தை வரம் புக்குள் வைத்திருக்கவும் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கவும் நீதித் துறை உருவாக்கப்பட்டது. ஆனால், தற்போது இது எதுவும் நடப்பதில்லை என்பதை நாம் பார்த்து வருகிறோம். அரசுக்கு எதிராக பேசுபவர்கள்  தேசத் துரோக வழக்கை எதிர்கொள் கின்றனர். சில நேரங்களில் சட்ட விரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தின்கீழ் போலியான வழக்கு களும் போடப்படுகின்றன. இதனால், பல ஆண்டுகளுக்கு பிணைகூட  கிடைப்பதில்லை. இது அப்பட்டமாக நடக்கிறது. இதற்கு எதிராக நமது நீதித்துறை செயல்பட முடியவில்லை. இதன்மூலம், நீதித்துறையின் சுதந் திரமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி யுள்ளது. ஊடகமும் அரசால் கட்டுப் படுத்தப்படுகிறது. காவல்துறை அமைப்புகளும் அரசியலுக்காக பயன்படுத்தப்படுகின்றன. தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை உள் ளிட்ட விசாரணை அமைப்புகள் முற் றிலும் ஆளும் அரசின் கட்டுப்பாட் டில் உள்ளன.

இதனால், ஜனநாயகம் உண் மையான அச்சுறுத்தலில் உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங் களிலும் முறைகேடுகள் நடைபெறு வதற்கான சாத்தியங்கள் இருப்பதாக நான் கருதுகிறேன். எனவே பல நாடுகளும் மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கு மாறியதைபோல இங்கும் வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும். ஜனநாயகத்தின் முன் உள்ள இந்த சவால்களை சமாளிக்க, பல்வேறு சீர்திருத்தங்கள் தேவைப் படுகின்றன. எதிர்க்கட்சிகள் பல வீனமாக இருப்பதால் இதுபோன்ற சீர்திருத்தங்கள் அவர்களால் மட்டும் செய்துவிட முடியாது. மக்கள் தங்கள் குரல்களை தற்போது எழுப்ப வேண்டும். லோக்பால் மசோதாவிற்கு குரல் கொடுத்ததை போல நியாயமற்ற நடவடிக்கைகளுக்கு எதிராகவும் மக்கள்குரல் கொடுக்கலாம். வேலை வாய்ப்பின்மை, பொதுத்துறை நிறு வனங்கள் தனியார் மயம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராக மக்கள் பெரும் போராட்டத்தை முன் னெடுக்க வேண்டும். இது எதிர்க் கட்சிகளையும் பலப்படுத்தும்.” 

- இவ்வாறு பிரசாந்த் பூஷண் பேசியுள்ளார்.

No comments:

Post a Comment