கன்னியாகுமரி மாவட்ட கழக சார்பாக திராவிடர்கழக கொள்கை விளக்க துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் வழங்கி பரப்புரை செய்தனர் தோழர்கள். நாகர்கோவில் மாநகர பகுதிகளில் நடந்த இந்த பரப்புரை நிகழ்ச்சிக்கு கழக குமரி மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் பிரான்சிஸ், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், பொதுக்குழு உறுப்பினர் மா.மணி மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.இராஜேஷ், அமைப்பாளர் மு.இராஜசேகர் மாநகர துணைத் தலைவர் கவிஞர் ஹ. செய்க்முகமது, பெரியார் பிஞ்சு யாழினி கன்னியாகுமரி க.யுவான்ஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர் . தந்தை பெரியாருடைய கருத்துகள், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடைய கருத்துக்கள் அடங்கிய துண்டறிக்கைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி படித்தனர்.
Tuesday, September 6, 2022
கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக கழகக் கொள்கை விளக்க துண்டறிக்கை பிரச்சாரம்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment