டாக்கா, செப். 29- வங்கதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை பக்தர்களை ஏற்றிச் சென்ற படகு மூழ்கிய தில் அன்றைய தினம் 24 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோரைக் காணவில்லை. என வங்கதேச மாநிலம் வடக்கு பஞ்சகர் நகர மாவட்ட நிர்வாக அலுவலர் ஜஹுருல் இஸ்லாம் தெரிவித்திருந்தார்.
இந்தப் படகில் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட மூன்று மடங்கு ஆட்கள் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை பிற்பகல் மூன்று மணி நிலவரப்படி 61 பேர் பலியாகிவிட்டனர். இன்னும் பலரைக் காணவில்லை என மாவட்ட நிர்வாக அலுவலர் ஜஹுருல் இஸ்லாம் தெரி வித்தார். பலியானவர்களில் 28 பேர் பெண்கள். 18 பேர் குழந்தைகள். காணாமல் போனவர் களை தேடும் பணி தொடர்கிறது. மகாளய அமாவாசையையொட்டி இந்துக்கள் தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்துவிட்டு கோவிலுக்கு படகில் சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
கடந்த 2015-ஆம் ஆண்டு டாக்காவில் சரக்குக் கப்பலுடன் படகு ஒன்று மோதியதில் 78 பேர் பலியாயினர். அதற்குப் பின் தற்போது நடந்த விபத்தில் 61 பேர் பலியாகியுள்ளனர். வங்கதேசத்தில் ஒவ்வொரு ஆண்டும் படகு விபத்துக்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழக் கின்றனர்.
No comments:
Post a Comment