தமிழ்நாட்டில் புதிதாக 538 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 26, 2022

தமிழ்நாட்டில் புதிதாக 538 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு

சென்னை,செப்.26- தமிழ்நாட்டில் நேற்று (25.9.2022) ஆண்கள் 269, பெண்கள் 269 என மொத்தம் 538 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 110 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 80,439 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 35 லட்சத்து 36,998 பேர் குணமடைந்துள் ளனர். நேற்று மட்டும் 492 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழ்நாடு முழுவதும் 5,395 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று நோய்த்தொற்று யாரும் உயிரிழக்க வில்லை. தமிழ்நாட்டில் 24.9.2022 அன்று கரோனா தொற்று பாதிப்பு 533 ஆகவும், சென்னையில் 116 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை சிறிய அளவில் ஏற்றம் கண்டு வருவதை கவனிக்க முடிகிறது.

 

No comments:

Post a Comment