தமிழ்நாட்டில் மேலும் 537- பேருக்கு கரோனா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 28, 2022

தமிழ்நாட்டில் மேலும் 537- பேருக்கு கரோனா

சென்னை, செப்.28 தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பால் நேற்று (27.9.2022) உயிரிழப்பு எதுவும் இல்லை சென்னை, தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 537 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து  வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 502 ஆகும். கரோனா பாதிப்பால்  உயிரிழப்பு எதுவும் இல்லை. வீட்டு கண் காணிப்பு உள்பட சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக் கையில் 5,472 ஆகும். அதிகபட்சமாக தலைநகர் சென் னையில் 105 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில்.... 

4 மாதங்களுக்கு பிறகு இந்தியாவில் கரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் 3,230 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய சுகாதாரத்துறை  காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேர கரோனா பாதிப்பு குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 118 நாட்களில், இதுவரை இல்லாத அளவுக்கு கரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.   கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 230 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன்மூலம் நாட்டில் இதுவரை கரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 45 லட்சத்து 75 ஆயிரத்து 473 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது, நாடு முழுவதும் 37 ஆயிரத்து 213 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனா பாதிப்பில் இருந்து  மட்டும் 4255 பேர் குணமடைந்த நிலையில்,  இதுவரை 4 கோடியே 40 லட்சத்து 4 ஆயிரத்து 553 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 32 பேர் கரோனாவுக்கு  உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 562 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 217 கோடியே 82 லட்சத்து 43 ஆயிரத்து 967 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment