சென்னை செப். 29 தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பேசும்போது, 'கட்டணமில்லா மகளிர் பயணத் திட்டத்தின் மூலம் அரசு பேருந்துகளில் இதுவரை 173 கோடி பெண்கள் பயணம் மேற்கொண்டுள் ளனர். இத்திட்டத்திற்கு அரசு நிதி உதவி வழங்குவ தால் போக்குவரத்து கழகங் களுக்கு இழப்பு எதுவும் இல்லை' என்று தெரிவித்தார். மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு சென்று வரக்கூடிய காலை, மாலை நேரங்களில் பேருந்து பற்றாக்குறை என்ற நிலை ஏற்படாதபடி, பள்ளிக் கல்வித் துறையிடம் கலந்தாலோசித்து பேருந்து களை இயக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர், வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலை உள்ளதால் பேருந்து களில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து, பயணிகளுக்கு எவ்வித இடர்ப்பாடுகளும் ஏற்படா வண்ணம் இயக்க நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தினார்.
Thursday, September 29, 2022
தமிழ்நாட்டில் இதுவரை அரசு பேருந்துகளில் 173 கோடி பெண்கள் இலவச பயணம்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment