ரேஷன் கடை பெண் ஊழியர்களுக்கு 12 மாத மகப்பேறு விடுப்பு தமிழ்நாடு அரசு ஆணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 11, 2022

ரேஷன் கடை பெண் ஊழியர்களுக்கு 12 மாத மகப்பேறு விடுப்பு தமிழ்நாடு அரசு ஆணை

சென்னை, செப்.11  நியாய விலை கடையில் பணிபுரியும் பெண் விற்ப னையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு 270 நாட்கள் மகப்பேறு விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அரசு பெண் பணியாளர் களுக்கு மகப்பேறு விடுப்பு 9 மாதத்தில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தி ஆணை வழங்கப்பட்டுள்ளது. அரசு பணியாளர்களுக்கு அரசால் அவ்வப்போது அறிவிக்கப் படும் மகப் பேறு விடுப்பு குறித்த சலுகைகள் கூட்டுறவு நிறுவனங்களில் பணி புரியும் மகளிர் பணியா ளர்களுக்கு பொருந்தும் என கூட்டுறவு சங்கங் களின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கூட்டு றவு சங்கங்களின் பதி வாளர் சண்முகசுந்தரம் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி யுள்ளார். அதில், அரசு பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு 9 மாதத்தில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தி ஆணை வழங்கப்பட்டுள் ளது. அரசு பணியாளர் களுக்கு அரசால் அவ்வப் போது அறிவிக்கப் படும் மகப்பேறு விடுப்பு குறித்த சலுகைகள் கூட்டுறவு நிறுவனங்களில் பணி புரியும் மகளிர் பணியா ளர்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள் ளது. அதன்படி, நியாய விலை கடைகளில் பணி புரியும் பெண் பணியாளர் களுக்கும் 12 மாதங்கள் மகப்பேறு விடுப்பு பொருந்தும்.

இதற்கென அனைத்து சங்கங்களிலும் தேவை யான சிறப்பு துணை விதி திருத்தம் மேற்கொள்ளப் பட்டு தகுதியுள்ள பெண் பணியாளர்களுக்கு இவ் விடுப்பினை அனுமதிக்க தங்கள் அளவில் தக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். தங்கள் மண்ட லத்தில் செயல்படும் அனைத்து கூட்டுறவு சங் கங்களின் கட்டுப்பாட் டில் உள்ள நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் பெண் விற்பனையாளர் கள் மற்றும் கட்டுநர் களுக்கு அரசாணையின் படி 12 மாதங்கள் மகப் பேறு விடுப்பு அனுமதிக்க தேவையான துணை விதி திருத்தங்கள் மேற்கொள் ளப்பட்டு தகுதியுள்ள அனைத்து பெண் பணி யாளர்களுக்கும் மகப் பேறு விடுப்பு அனுமதிக் கப்படுவதை தங்கள் அளவில் கண்காணித்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அரசு பணியாளர் களுக்கு, அரசால் அவ்வப் போது அறிவிக்கப்படும் சலுகைகள் நியாய விலைக் கடை பணி யாளர்களுக்கும் பொருந் தும் என பதிவாளரால் தெரிவிக்கப்பட்ட இனங் களில் அரசு பணியாளர் களுக்கு அரசால் அறிவிக் கப்படும் சலுகைகள் தொடர்பாக உடனுக் குடன் சங்க துணை விதிகளில் உரிய திருத் தங்கள் மேற்கொள்ளப் பட்டு சம்பந்தப் பட்ட பணியாளர்களுக்கு அச்ச லுகைகள் கிடைக்க உட னுக்குடன் நடவடிக்கை எடுக்கவும், அவ்வாறு திருத்தங்கள் மேற்கொள் ளப்படாமல் இது போன்ற புகார்கள் பெறப் படுவதை தவிர்க்க வேண் டும். இவ்வாறு அந்த சுற் றறிக்கையில் கூறப்பட் டுள்ளது.


No comments:

Post a Comment