தாம்பரம் மாவட்டத்தில் பெரியார் 1000 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 7, 2022

தாம்பரம் மாவட்டத்தில் பெரியார் 1000

தாம்பரம், செப். 7- தாம்பரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெரியார் 1000 போட்டித் தேர்வு நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு:

மணிமங்கலம் 

23.8.2022 அன்று காலை 10.30 மணி யளவில் பெரியார் 1000  வினா விடை தேர்வு தாம்பரம் மாவட்ட கழகம் சார் பில் மணிமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர்,துணைத் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பெரு மக் கள் முழு ஒத்துழைப்பு வழங்கி தேர்வை சிறப்பாக நடத்தி முடித்து கொடுத்தனர். மாவட்ட தலைவர் ப.முத்தையன், மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன், சோழிங்கநல்லூர் மாவட்ட பகுத்தறி வாளர் கழக செயலாளர் விடுதலை நகர் பி.சி.ஜெயராமன், தாம்பரம் நகர துணைச் செயலாளர் மா.குணசேகரன், படப்பை சந்திரசேகரன் பெரியார் உயராய்வு மய்ய ஆசிரியர் தியாகராஜன் ஆகியோர் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பெருமக்களுக்கு நன்றி கூறி விடைபெற்றனர்.

மாகானியம்  

23.8.2022 அன்று காலை 11 மணியள வில் பெரியார் 1000 வினா விடை தேர்வு தாம்பரம் மாவட்ட கழகம் சார்பில் மணிமங்கலம் மாகானியம்  அரசு உயர் நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர்,துணைத் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பெரு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி தேர்வை சிறப்பாக நடத்தி முடித்து கொடுத்தனர். மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன், சோழிங்கநல்லூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலா ளர் விடுதலை நகர் பி.சி.ஜெயராமன், தாம்பரம் நகர துணைச் செயலாளர் மா.குணசேகரன்,படப்பை சந்திரசேக ரன் ஆகியோர் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பெரு மக்க ளுக்கு நன்றி கூறி விடைபெற்றனர்.

சோமங்கலம்

30.8.2022 அன்று காலை 10.30 மணியளவில் பெரியார் 1000  வினா விடை தேர்வு தாம்பரம் மாவட்ட கழ கம் சார்பில் சோமங்கலம் அரசு  மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பெரு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி தேர்வை சிறப்பாக நடத்தி முடித்து கொடுத்தனர். தாம்பரம் மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன், சோமங்கலம் ஊராட்சி மன்றத் தலை வர் ஆரிக்கம் அவர்களின் இணையர் ஜெயபால், சோமங்கலம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பவானி அவர்களின் இணையர் மேலைஞானம், சோமங்கலம் பகுதி கழக தலைவர் புருஷோத்தமன்,குன்றத்தூர் ஒன்றிய தலைவர் இனமாறன்,ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் க.தமிழ்ச்செல்வன், தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன் ராஜ், தாம்பரம் நகர துணைச் செயலா ளர் மா.குணசேகரன்,மற்றும் படப்பை சந்திரசேகர் ஆகியோர் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பெருமக் களுக்கு நன்றி கூறி சிறப்பித்தனர்.

சிட்லபாக்கம் 

30.8.2022 அன்று பெரியார் 1000 வினா விடை தேர்வு தாம்பரம் மாவட்ட கழகம் சார்பில் சிட்லபாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பெரு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி தேர்வை சிறப்பாக நடத்தி முடித்து கொடுத்தனர். சென்னை மண்டல கழகத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி தலைமையில் தாம்பரம் மாவட்ட செயலாளர் கோ.நாத்தி கன், சோழிங்கநல்லூர் மாவட்ட பகுத்தறி வாளர் கழக செயலாளர் விடுதலை நகர் பி.சி.ஜெயராமன், தாம்பரம் நகர செய லாளர் சு.மோகன்ராஜ், தாம்பரம் நகர துணைச் செயலாளர் மா.குணசேகரன், ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் க. தமிழ்ச்செல்வன் மற்றும் படப்பை சந்திரசேகர் ஆகியோர் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பெரு மக்களுக்கு நன்றி கூறி சிறப்பித்தனர்.

குரோம்பேட்டை

1.9.2022 இன்று பிற்பகல் 2.30 மணிய ளவில் பெரியார் 1000 வினா விடை தேர்வு தாம்பரம் மாவட்ட  கழகம் சார் பில் குரோம்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர்,துணைத் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பெரு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி தேர்வை சிறப்பாக நடத்தி முடித்து கொடுத்தனர். தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ், பெரியார் உயராய்வு மய்ய ஆசிரியர் தியாகராஜன் ஒருங்கிணைத்து பங்கேற்றனர்.


No comments:

Post a Comment