கேள்வி: ஸ்டாலினை ‘மனு நீதிச் சோழன்' என்று பட்டப் பெயரிட்டு தி.மு.க.வினர் பதாகை வைத்தது பொருத்தம்தானா?
பதில்: ஸ்டாலினுக்குப் பொருத்தமோ இல்லையோ, தி.மு.க.வினர் அவரை அழைத்து கி.வீரமணியையும், திருமாவளவனையும் நெளிய விட்டதில் நமக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
- ‘துக்ளக்', 24.8.2022
விவரம் புரியாத யாரோ பதாகை வைத்திருக்கலாம் - அவர்கள் திருத்தப்பட வேண்டியவர்களே!
அதேநேரத்தில், குருமூர்த்திக் கும்பல் மனுவின்படி நம்மைச் 'சூத்திரராகக் கருதுவதில்' (வேசி மக்கள்) எவ்வளவு மட்டமற்ற மகிழ்ச்சி அடைகிறார்கள் என்ப தைக் கவனிக்கத் தவறக் கூடாது.அவர்கள் வீட்டுப் பெண்களைப்பற்றியும்கூட விபச்சார தோஷம் உடையவர்கள் என்று (மனு அத்தியாயம் 9; சுலோகம் 19) மனு கூறுவதுபற்றிக் கூட அவர்களுக்குக் கவ லையில்லை - நம்மை சூத்திரர்கள் என்று சொல்லு வதுதான் ஏகப்பட்ட சந்தோஷம் அவாளுக்கு!
No comments:
Post a Comment