மின்னகத்தில் முதலமைச்சர் திடீர் ஆய்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 17, 2022

மின்னகத்தில் முதலமைச்சர் திடீர் ஆய்வு

சென்னை, ஆக.17 மின்சாரம் தொடர்பான பொதுமக்களின் குறைகளுக்குத் தீர்வு காண தொகுதி வாரியாக பொறியாளர்களை நியமிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட் டுள்ளார்.

தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலு வலகத்தில் செயல்பட்டு வரும் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் மய்யமான மின்னகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (16.8.2022)  நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, 10 லட்சமாவது நுகர்வோரான சுவாமிநாதன் உடன் மின்னகத்தில் இருந்து அலைபேசி மூலம் தொடர்புகொண்டு மின்னகத்தினால் வழங்கப்பட்ட குறைதீர் சேவை பற்றி கேட்டறிந்தார். மேலும், பொதுமக்களின் அழைப்புகளை ஏற்று, குறைகளை கேட்டறிந்து, அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, “இம்மின்னகத்தில் (16.8.2022) நேற்றைய தேதி வரை 10,50,282 புகார்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. அவற் றுள் 10,41,872 புகார்களுக்கு தீர்வுகள் காணப்பட் டுள்ளன. மொத்தத்தில் 99% புகார்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது மிகவும் பாராட்டுக்குரியது.

தமிழ்நாட்டு மக்களின் மின்துறை சார்ந்த குறைகளை தீர்ப்பதில் முழுமூச்சுடன் செயல்பட்டு, அன்றைய தினமே தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்னகத்திற்கு வரும் பொதுமக்களின் அழைப்புகளுக்கு குறுஞ்செய்தி மூலம் ஒப்புகை அளிப்பதோடு, குறைகள் தீர்வு காணப்பட்டவுடன் அதுகுறித்தும் பொதுமக்களிடம் அலைபேசி வாயிலாக உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தொகுதி வாரியாக செயற்பொறியாளர் ஒருவரும், அமைச் சர்களின் தொகுதிகளில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த மேற்பார்வை பொறியாளர்களும் நியமிக் கப்பட்டு, அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப் பினர்களை தொடர்பு கொண்டு பொதுமக்களின் தேவை மற்றும் குறைகளை கேட்டறிந்து உடனடியாக சரி செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று மின்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


No comments:

Post a Comment