தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்த இளைஞர்மீது கொடூரத் தாக்குதல்
போபால், ஆக. 10- பாஜக ஆளும் மத் தியப்பிரதேச மாநிலத்தில் தாழ்த் தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளை ஞர் வன்கொடுமைக்கு உள்ளாக் கப்பட்டுள்ளார். அவர்மீது உண வுப்பொருட்களைத் திருடியதாகக் குற்றம் சுமத்தி, அவரை நிர்வாண மாக்கி சரமாரியாகத் தாக்கிய வன் கொடுமை அரங்கேறியுள்ளது.
அம்மாநில காவல்துறையி னரோ பாதிப்புக்குள்ளான இளை ஞர் மீதே வழக்குப் போட்டு அவரை சிறையிலடைத்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலம், கர்கோன் அருகே உள்ள உணவுப்பொருட்கள் தயா ரிப்பு நிறுவனத்திலிருந்து சோயா பொட் டலங்களை திருடியதாகக் கூறி, 32 வயதான இளைஞர் ஒரு வரை அப்பகுதியினைச் சேர்ந்தவர் கள் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். மேலும், அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதை உறுதி செய்ய அவரது ஆடைகளை களைந்து நிர் வாணப்படுத்தினர்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற காவல்துறையினர், இளைஞ ரைத் தாக்கியவர்கள் மீது நடவ டிக்கை எடுக்காமல், பாதிக்கப்பட்ட இளைஞரையே கைது செய்துள் ளனர். விசாரணையில் அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வர் என்பது தெரிய வந்துள்ளது. கடந்த 2.8.2022 அன்று இளைஞர் தாக்கப்பட்ட நிகழ்வின் காட்சிப் பதிவு தற்போது சமூக வலைதளங் களில் வெளியாகி பரவியுள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட இளைஞரைக் கைதுசெய்த கல்தாங்கா காவலர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட் டுள்ளார். இதற்கான உத்தரவை கர்கோன் காவல்துறை கண்காணிப்பாளர் தரம்வீர் சிங் பிறப்பித்துள்ளார். குற்றம் சாட்டப் பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், பாதிக் கப்பட்டவரையே சிறையில் அடைத்தது தொடர்பாக பதிலளிக் குமாறு, கல்தாங்கா காவல் நிலையப் பொறுப்பாளர் ராஜேந்திர சிங் பாகேலுக்கும் அவர் உத்தரவிட் டுள்ளார். மேலும் உணவுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத் தைச் சேர்ந்த 4 பேர் மீதும் வழக் குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment