‘விடுதலை' சந்தா சேர்ப்பு - சிதம்பரம் கடைவீதியில் 20.8.2022 சனிக்கிழமை மாலை நடைபெற்றது. சிதம்பரம் மேலவீதி பெரியார் சிலையில் தொடங்கி ஊர்வலமாக மேலவீதி - காசு கடைத்தெரு, தெற்கு வீதி, வேணுகோபால் பிள்ளை தெரு வழியாகச் சென்றனர். நிகழ்ச்சியில் மாவட்ட கழக தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், மாவட்ட செயலாளர் அன்பு.சித்தார்த்தன், மாவட்ட துணைத் தலைவர் கோவி.பெரியார்தாசன், மாவட்ட மேனாள் அமைப்பாளர் தென்னவன், பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலர் செயபால், புவனகிரி ஒன்றிய தலைவர் கழக இராமதாஸ், காட்டுமன்னார்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆனந்தபாரதி, மாவட்ட இளைஞரணி தலைவர் சுரேஷ், இளைஞரணி செயலாளர் சிலம்பரசன், தலைமையாசிரியர் கலைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு துண்டு பிரசுரமும் வழங்கப்பட்டது.
Monday, August 22, 2022
சிதம்பரம் நகர கடைவீதிகளில் ‘விடுதலை' சந்தா சேர்ப்பு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment