கோயில்களில் பராமரிக்க இடம் இல்லையெனில் மாடுகளை பக்தர்களிடமிருந்து பெறக் கூடாது உயர்நீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 28, 2022

கோயில்களில் பராமரிக்க இடம் இல்லையெனில் மாடுகளை பக்தர்களிடமிருந்து பெறக் கூடாது உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, ஆக.28- ‘கோயில்களில் மாடுகளை பராமரிக்க தனி இடம் இல்லாவிட்டால், பக்தர்களிட மிருந்து மாடுகளை பெறக் கூடாது’ என்று உயர் நீதிமன்றம் கூறி யுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியை சேர்ந்த சங்கரலிங்கம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “திருப்புவனம் நகரைச் சுற்றிலும் தனியார் மற்றும் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந் தமான பல்வேறு கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதி களிலிருந்து பக்தர்கள் வருகின் றனர். பக்தர்கள் நேர்த்திக்கடன் என்ற பெயரில் பசு மற்றும் காளை மாடுகளை கோயிலுக்கு வழங்கு கின்றனர். இந்த மாடுகளை பரா மரிக்க வேண்டியது கோயில் நிர்வாகத்தின் கடமையாகும்.

ஆனால், கோயில் நிர்வாகம் பக்தர்கள்  வழங்கும் மாடுகளை சரியாக பராமரிப்பது இல்லை. இதனால் பக்தர்கள் கோயில்களுக்கு வழங்கிய 50-க்கும் மேற்பட்ட மாடுகள் திருப்புவனம் வீதிகளில் சுற்றித் திரிகின்றன. இந்த மாடுகளால் சாலையில் அடிக்கடி விபத்துகளும், உயிரி ழப்புகளும் நடைபெறுகின்றன. இதுவரை 10-க்கு மேற்பட்ட மாடு களும் விபத்தில் இறந்துள்ளன. இதனால், கோயில் மாடுகளை பராமரிக்க உரிய இடம் ஒதுக்கக் கோரி திருப்புவனம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் புகார் அளித்தோம். இதுவரை நட வடிக்கை எடுக்கவில்லை. எனவே, திருப்புவனம் பகுதியில் கோயில் களுக்கு   வழங்கப்படும் மாடுகளை பராமரிப்பு இல்லாமல் சாலை களில் சுற்றித் திரிவதை தடுக்க கோயில் மாடுகள் பராமரிப்பு மய்யம் தொடங்க உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர் வில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது நீதிபதிகள், “கோயிலுக்கு வழங்கப்படும் மாடுகளை கோயில் இடத்தில் பராமரிக்க வேண்டும். கோயில் நிலங்களை பிளாட் போட்டு விற்றால், இடங்கள் எவ்வாறு இருக்கும்? கோயிலில்  பெறப்படும் மாடு களை பராமரிக்க இடம் இல்லை என்றால், பராமரிக்க இடம் இல் லாததால் மாடுகளை பெறப் படாது என கோயிலுக்கு வெளியே  எழுதி வைக்க வேண்டும்.

மாடுகளை பராமரிப்பது தொடர்பாக திருப்புவனம் பேரூ ராட்சி செயல் அலுவலர் நீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 29-க்கு ஒத்தி வைத்தனர்.


No comments:

Post a Comment