கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ‘விடுதலை' சந்தா சேர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 22, 2022

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ‘விடுதலை' சந்தா சேர்ப்பு

 கிருஷ்ணகிரி மாவட்ட கழகத்தின் (19-8-2022) வெள்ளிக்கிழமை காலை11 மணியளவில்    விடுதலை சந்தா சேர்ப்பு இயக்கம் மாவட்ட தலைவர் 

த.அறிவரசன் தலைமையில் காவேரிபட்டணத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கா. மாணிக்கம், துணைத் தலைவர் வ. ஆறுமுகம், மேனாள் மாவட்ட தலைவர் பெ.மதிமணியன், காவேரிப்பட்டணம் ஒன்றிய தலைவர் பெ.செல்வம், ஆகியோர் முன்னி லையில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணி விக்கப்பட்டது. 

அதன்பின் மாநில அமைப்புச் செயலாளர் ஊமை .ஜெய ராமன் சந்தா சேர்ப்பு இயக்கத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து கழகத் தோழர்கள் காவேரிப்பட்டணம் நகர வீதிகளில் கழகக் கொடியுடன் பதாகைகளை பிடித்துக் கொண்டு ஊர்வலமாக சென்று கடை களுக்கு துண்டறிக்கை வழங்கி, விடுதலை சந்தாக் கள் திரட்டப்பட்டது. மேலும்  பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா சரவணன், காவேரிப் பட்டணம் ஒன்றிய செயலாளர் பெ.செல்வேந்திரன், நகர தலைவர் 

பு.இராஜேந்திரபாபு, மத்தூர் ஒன்றிய தலைவர் 

கி.முருகேசன், பகுத்தறிவாளர் கழக மேனாள் மாவட்ட அமைப்பாளர் மு. வேடியப்பன், ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் அ.வெங் கடாசலம், பொதுக் குழு உறுப்பினர் த.சுப்பிரமணியம், மண்டல மாணவர் கழக செயலாளர் சமரசம், கரு நாடக மாநில மாணவர் கழக அமைப்பாளர் கருஞ்சட்டை முனியப்பன், பர்கூர் ஒன்றிய தலைவர் ப.பிரதாப், ஆகியோர் கலந்து கொண்டனர். (19.8.2022)

No comments:

Post a Comment