"செருப்பொன்று போட்டால் சிலையொன்று முளைக்கும்" எனும் வரலாறு படைத்த அய்யா சிலை வைத்து 50 ஆண்டுகள் ஆன பொன் விழா கண்ட இடத்தில் கழகத்தினர் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் கொண்டாடினர். கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மேனாள் சட்டமன்ற உறுப்பினர் இள.புகழேந்தி, மண்டல செயலாளர் தாமோதரன், மாவட்ட தலைவர் தண்டபாணி, மாவட்ட செயலாளர் சிவக்குமார், மாவட்ட அமைப்பாளர் மணிவேல், நகர தலைவர் எழிலேந்தி, செயலாளர் சின்னதுரை, ஒன்றிய செயலாளர் தர்மன், திராவிடர் இளைஞரணி செயலாளர் வேலுமாதவன், அசோக், சி.பி.எம் மாவட்ட செயலாளர் மாதவன், மாநில மாதர் சங்க தலைவர் வாலண்டினா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன், கண்ணன், தர்மலிங்கம், தர்மன், சுந்தரமூர்த்தி, பெரியார் செல்வம், பாலு ஆகியோர் பங்கேற்று முழக்கமிட்டனர்.
சட்டமன்ற உறுப்பினர் கோ.அய்யப்பன் மற்றும் தி.மு.க. தோழர்கள் மாலை அணிவித்தனர். காங்கிரஸ் மாவட்ட தலைவர் திலகர், செயலாளர் ரமேஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் குளோப், முஸ்லீம் லீக் தாவுத் ஆகியோர் மாலை அணிவித்தனர்.
No comments:
Post a Comment